சனி, பிப்ரவரி 5

உயிர்நிழல் 33 வது இதழ் வெளியாகியுள்ளது



லஷ்மி. ந. சுசீந்திரன் ஆகியோரைத் தொகுப்பாசிரியர்களாகக் கொண்டு பிரான்சிலிருந்து வெளிவரும் புகலிடச் சிற்றிதழாகிய உயிர்நிழலின் ஜனவரி 2011 இதழ் வெளியாகியுள்ளது.
கவிதைகள், கட்டுரைகள், புனைவு, நேர்காணல்கள், எதிர்வினைகள், ஆகியவற்றுடன் மிகக் கனதியான இதழாக மிளிர்கிறது. உலக சினிமா மற்றும் அரசியல் சார்ந்த ஆழமான கட்டுரைகள் சிந்தனையைத் தூண்டக் கூடியனவாகவுள்ளன.

றிஸ்மினி, விசா, துவாரகன், பைசால், எம்.றிஷான் ஷெரீப், மருதம் கேதீஸ், பாலைநகர் ஜிப்ரி ஹஸன் ஆகியோரின் கவிதைகள் இதழை அலங்கரிக்கின்றன.
சிங்களத்தினூடாக சந்தியா எக்னெலிகொட, ஆங்கிலத்தினூடாக மாயா அஞ்சலோ ஆகியோருடனான உரையாடல்களுடன்; காலம் இதழில் வெளியாகிய து. குலசிங்கத்தின் உரையாடலும் திருத்தங்களுடன் மீளவும் இவ்விதழில் பிரசுரமாகியுள்ளன.

எடுவர்டோ கலேயனோ, ரதன், வி.சிவலிங்கம், கலையரசன், சார்ள்ஸ் சர்வன், உபாலி கூரே, எம். ரிஷான் ஷெரீப், பப்ரிஸ் ஹேர்விய வனே, சுல்பிகா, ஜோர்ஜ் குருஷ்சேவ் ஆகியோரின் கட்டுரைகள் உள்ளன.

இவற்றில் அற்றம் எகோயன் ‘உலக சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை’ என்ற ரதனின் கட்டுரை மிக விரிவான ஒரு பதிவாக உள்ளது. அத்தோடு அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச எழுத்தாளர் விழாவிலும் காட்சிப்படுத்தப்பட்ட பிரதீபனின் ‘நிசப்தத்தின் நிழல்’ SHADOW OF SILENCE குறும்படம் பற்றிய ஆழமாக கட்டுரையொன்றினை சார்ள்ஸ் சரவணன் எழுதியுள்ளார்.

இவை தவிர ச. இராகவனின் புனைவும், நந்தினி சேவியர், த. மலர்ச்செல்வன் ஆகியோரின் எதிர்வினைகளும் உள்ளடங்கியுள்ளன.

பதிவு: சு. குணேஸ்வரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக