சனி, ஜூன் 25

காலம் 37 வது இதழ் வெளிவந்துள்ளது.


காலம் 37 வது இதழ் எஸ்.பொ இயல்விருது சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. இந்த இதழில் எஸ்.பொவின் இயல்விருது ஏற்புரையும் ஏ.ஜே கனகரட்னா, நீலாவாணன், பா.செயப்பிரகாலம் எழுதிய எஸ்.பொ பற்றிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

அருண் சிவகுமார், யமுனா ராஜேந்திரன், சீரோதி ராமச்சந்திரன் ஆகியோரின் சினிமா பற்றிய கட்டுரைகள் உள்ளன.

மு.புஸ்பராஜன், பெண்ணியா, லஷ்மி மணிவண்ணன், அனார், அஜிதா, மயூரரூபன், ரவிக்குமார் ஆகியோரின் கவிதைகள் உள்ளடங்கியுள்ளன.

சச்சிதானந்தன் சுகிர்தராஜாவினதும் அ.முத்துலிங்கத்தினதும் பத்தி எழுத்துக்கள் உள்ளன.

புத்தக விமர்சனங்களை ஜெயமோகன், மணி வேலுப்பிள்ளை, பொ.கருணாகரமூர்த்தி, டி.சே.தமிழன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

மெலிஞ்சி முத்தனின் சிறுகதையும், என்.கே மகாலிங்கத்தின் மொழிபெயர்ப்பும், சிவதாசனின் சந்திப்புத் தொடர்பான கட்டுரையும், ஈழத்துப் பூராடனார் பற்றிய அஞ்சலிக்குறிப்பும் இடம்பெற்றுள்ளன.
எஸ்.ராமகிருஷ்ணனின் ‘கவிதையியல்’, மு.பொ வின் 'இன்றைய கவிதை' ஆகிய திறனாய்வுக் கட்டுரைகளும் உள்ளடங்கியுள்ளன.

அவற்றில் மு.பொ வின் 'இன்றைய கவிதை' என்ற திறனாய்வுக் கட்டுரையை எனது வலைப்பதிவு நண்பர்களின் வாசிப்புக்காக இத்துடன் இணைத்துள்ளேன்.

(பிரதியின் மேல் அழுத்தினால் பெரிதாக்கி வாசிக்கமுடியும்)