ஞாயிறு, டிசம்பர் 11

யாழ்ப்பாண பதிப்பக முயற்சிகள்

நன்றி - யோ. கர்ணன்
http://yokarnan.com/?p=39


            
சகறணம்துயில்ஆடுஜீவிதம் என நல்ல நாவல்கள் பல அண்மை காலத்தில் வெளிவந்திருக்கின்றன என நான்கேள்விப் பட்டிருக்கிறேன்.இஸ்ரேலியர்களினால் பெருந்தொகை பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்பட்டதைலிபிய முன்னாள் அதிபர் கடாபி கொல்லப்பட்டதை மற்றும் உலகில் நடக்கும் பல புதினங்களைசெய்தியின் வாயிலாக அறிந்து கொண்டிருப்பதை போல இதனையும் இணையத்தளத்தின் வழி அறிந்து மட்டும் கொண்டேன். சில இடங்களில் அட்டைபடத்தையும்பார்க்க முடிந்தது. நேரில் காண முடியவில்லை. காரணம் நான் யாழ்ப்பாண வாசி.
சென்றவாரம்வரை யாழ் புத்தக கடைகளில் சல்லடை போட்டும் இதிலொருநாவலும் கிடைக்கவில்லை. அடுக்கிக்  கிடக்கும் ரமணி சந்திரனின்நாவல்களிற்கிடையிலாவது மறைந்திருக்கிறதா என தேடியும் பலனிருக்கவில்லை.
இந்த நாவல்கள் வெகு காலம் கழித்து மிகச்சிலவாக இங்கு வரக்கூடும். அப்பொழுது சிலவேளைகளில் அவை இணையத்தில் வாசிக்கக் கூட கிடைக்கலாம்.
இப்படித்தானிருக்கிறது யாழ்ப்பாண நிலை. காலச்சுவடுமற்றும் உயிர்மை என்ற நட்சத்திர‘ சஞ்சிகைகள் தவிர வேறெதுவும் ஒழுங்கு முறைப்படி வருவதில்லை. புதுவிசை. புத்தகம்பேசுதுமற்றும் சில எப்பொழுதாவது வருகின்றன.
எல்லா கடைகளிலும் ஜனனிபிரியாமித்திரன் வகையறாக்கள் முன்னுக்குத் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
இது போல இன்னொரு நிலையுமுண்டு. ஈழநூல்களிற்கானசந்தை வாய்ப்பு. ஈழ படைப்பாளிகளின் நூல்கள் சந்தைப்படுத்தப்படுவதில் பெரியசிரமங்களை எதிர் கொள்கின்றன. அனேகமான எல்லா ஈழப்படைப்பாளிகளும் அனேகசந்தர்ப்பங்களில் இந்த நிலை பற்றி சொல்லிக் கொண்டுதானிருக்கின்றனர்-சந்தைபடுத்துவதில் தாம் எதிர் கொள்ளும் சிரமங்கள் பற்றி. அதில் நிறைய உண்மையுமுண்டு. அண்மையில்வடலி பதிப்பாளர் அகிலனிற்கு நேர்ந்த ஒரு அனுபவத்தைச்சொன்னார். அவர்இந்தியாவிலிருந்து இலங்கை வரும் போது தனது பதிப்பகத்தால் வெளியிடப்பட்டபுத்தகங்களின் சில பிரதிகளைக்கொண்டு வந்திருந்தார். அதனைப்பூபாலசிங்கம் புத்தகசாலைக்குக்கொடுக்கச் சென்றபோது அவர்கள் மறுத்து விட்டார்கள்.
ஆனாலும் சில காலத்தின் பின் அந்தப் புத்தகங்கள் அந்தக்  கடையில் இருந்தன. அவர்கள் இந்தியாவில்தான்கொள்வனவு செய்வது என்ற ஒரு முடிவுடன்தானிருக்கிறார்களே தவிரநூல்களைப் பார்த்து வாங்குவதென்ற நிலையிலில்லை.
இந்த இரண்டு சம்பவங்களிற்கும் காரணம் மிகத்தெளிவானது. இந்திய கலாசார மற்றும் பண்பாட்டுத் தாக்கம். இதே விதமான நெருக்கடியை தாம் மலேசியாவில் எதிர் கொள்வதாக ண்மையில் இலங்கை வந்திருந்த நவீனும் சொல்லியிருந்தார்.
இந்திய பண்பாட்டின் தாக்கம் நாம் முயன்றாலும்விடுபட முடியாத அளவிற் தானிருக்கிறது. இது நமக்கு மட்டுமே உ ரிய பிரச்சனையல்ல.உபகண்டத்திலிருக்கும் மற்ற எல்லா சிறிய இனங்களும் இந்தக் கலைகலாசார, பண்பாட்டு நெருக்கடியை எதிர் கொள்கின்றன. இது கூட ஒருவிதமானஆக்கிரமிப்புதானென நண்பர் ஒருவர் சொன்னார். அவர் இதற்குப் பாவித்த பெயர் பண்பாட்டு ஆக்கிரமிப்பு‘. மலேசியாவில் தாமும்இதே விதமான நெருக்கடிகளை எதிர்கொள்வதாக அண்மையில் இலங்கை வந்திருந்த வல்லினம்ஆசிரியர் நவீனும் குறிப்பிட்டிருந்தார்.
நமது விருப்பம்ரசனைநாகரிகம்அனைத்தும் இந்தியாவில்தான் தீர்மானிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இலங்கையின்வானொலிகளைத் தவிர மிகுதி வேறெந்த ஊடகத்துறையும் தலையெடுக்க முடியாமல்த்தானிருக்கிறது. அல்லது இந்திய போட்டியாளர்களைபின் தொடர்பவையாகத் தான் இருக்கின்றன. வானொலிகள் மட்டுப்படுத்தப்பட்டளவு தூரவீச்சு அலைவரிசையைப்பாவிப்பதனால் அவை தப்பித்தனபோலும். ஆனாலும் சக்தி பண்பலை வானொலியில் நிகழ்ச்சி தயாரிப்பிற்கான முக்கியபொறுப்பில் இருப்பவர் ஒரு இந்தியர். இது குறித்த ஒரு புகாரை யாரோ ஒருவர் சிலகாலத்தின் முன் பத்திரிகையில் எழுதியிருந்தார். தவிரவும் பல பண்பலை வானொலிகளைமுதலில் கேட்கும் ஒருவர் இது இந்திய ஒலிபரப்பா அல்லது இலங்கை ஒலிபரப்பா என்றுநிச்சயம் குழப்பமடைவார்.லிபரப்பாளர்கள்-குறிப்பாகப் பெண்கள் - இந்திய பாணியிலான உச்சரிப்பையே கையாள்வார்கள். ஒரு வானொலி நண்பர் சொன்னார்இது தவிர்க்க முடியாதது. அப்படி பாவித்தால்தான் நிலை பெற முடியும் என.
நமது அமைவிடம் மற்றும் வேறு பல வரலாற்றுகாரணங்களின் நிமித்தம் இந்த விபத்து நேர்ந்து விட்டது. ஆயினும் நாம் ஓரளவுசுயாதீனத்திற்கு முயற்சிக்க வேண்டாமா என்ற கேள்வியிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் பலரிற்குவசந்தம் என்ற பெயரில் ஒரு தொலைக்காட்சி இருப்பதே தெரியாது(அதைப் பார்த்து எதுவும் ஆகப்போவதில்லை என்பது வேறு விசயம்). பல நண்பர்கள் சொல்வார்கள்- வீடுகளில் இலங்கை ஊடகங்களின் செய்தியறிக்கையைப் பார்க்க போராடவேண்டியிருப்பதாக. அனேக செய்தியறிக்கை நேரங்கள் மாலை ஏழுமணியை அண்மித்திருப்பதால்தமது வயோதிப தந்தைமார்-குறிப்பாக திராவிட பாரம்பரியத்தில் ஊறியவர்கள்- இந்திய அலைவரிசைகளில்தான்செய்தி பார்க்க வேண்டும் என அடம்பிடிப்பதாக. திராவிட இயக்கங்களின் வருகை கூடஇப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது. இலங்கை குறித்த ஒரு பரபரப்பான அல்லது முக்கிய செய்திஇலங்கை ஊடகம் ஒன்றில் சொல்லப்பட்டுக்கொண்டிருப்பதற்கு சாத்தியமுள்ள பொழுதில் தனது வீட்டினர்இந்திய தொலைக்காட்சியொன்றில் கனிமொழிக்கு பிணைகிடைக்குமா இல்லையா என்றசெய்தியையோ நாமக்கல்லில் கோழிகளிற்குப் பரவும் தொற்றுநோய் பற்றியோ வைத்தவிழி வாங்காமல் பார்த்துகொண்டிருப்பதாக ஒரு நண்பர் அண்மையில் புலம்பினார்.
இதனால்தான் இங்கு ஈழத்துகாந்திஈழத்துசௌந்தரராஜன்ஈழத்துசிவாஜி,பெண்சிவாஜி எல்லாம் உருவாக முடிந்தது.
இலக்கியத்தின் நிலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பலமானஎதிரியை எதிர் கொள்ள முடியாமல் அவை எப்போதோ சரணடைந்து விட்டன. ஆரம்பத்திலேயேகுறிப்பிட்டது போல ஈழக்கடைகளில் இலங்கை புத்தகங்கள் வாங்குவது அல்லது நல்ல புத்தகங்கள்(இதற்குள் இந்திய புத்தகங்களும் அடக்கம்) ஆச்சரியமான ஒரு நிகழ்வே. இலங்கையில்சில சஞ்சிகைகள் வரத்தான் செய்கின்றன. இன்றை திகதியில் இலங்கையில் வரும் அனேக சஞ்சிகைகளிற்கு இருக்கும் ஒரே பெருமை- தொடர்ச்சியான வருகை என்ற ஒன்று மட்டுமே. அதைத் தவிர்த்தால்பெரும்பாலானவற்றில் எதுவுமில்லை. ஊரில் இருக்கும் சங்கக்கடைகளை உங்களிற்குத் தெரிந்திருக்கும். நிவாரணநேரத்தில் ஊர் விதானையின் கையெழுத்துடன் அந்த அந்த ஊர் சங்கக்கடைகளிற்கு மட்டுமே போக வேண்டும். அங்கு மட்டுமே சாமான் கிடைக்கும். எனக்குஇந்த சஞ்சிகைகளை பார்க்க அந்த நினைப்புத்தான் வரும். பலதும் கிராம சஞ்சிகைகளாக மட்டுமேவருகின்றன. வந்ததும் பணச்சடங்கு நிகழ்வு போல ஊரிலுள்ளவர்களைக் கூட்டி வெளியீட்டு விழாநடத்தி அந்த பணத்தைப் பெற்று கொள்கிறார்கள். பலரும் கடைகளிற்குக் கொடுத்துத் தான் பணம் சேர்க்க வேண்டும்என்ற நிலையில் இல்லை.
இந்த வகையான போக்கிருக்கையில் புத்தகக் கடை உரிமையாளர்களையும்குற்றம் சொல்ல முடியாது. அவர்கள் வாசகர்கள் அல்ல. வியாபாரிகள் மட்டுமே. ஈழத்திற் பூக்கும் அத்தியை அவர்கள்கண்டுபிடிக்க வேண்டும் என எதிர்பார்க்கவும் முடியாது.
யாழ்ப்பாணத்தில் செழிப்பான ஒரு புத்தக பண்பாடு இருந்தது என்று சொல்லமுடியாவிட்டாலும் ஓரளவு சிறப்பான நிலை முன்னொரு காலத்தில்‘ இருந்திருக்கிறது.ஈழகேசரி பண்ணை பல ஈழத்துப்படைப்பாளிகளை அறிமுகம் செய்திருந்தது. பின்னர் முன்னர் போலஅல்லாவிட்டாலும்  வீரகேசரிமீரா, அலைதேசிய கலை இலக்கியப் பேரவைபுலிகளின் வெளியீடுகள் என நல்ல பல நூல்கள் வந்திருந்தன. அது ஒரு செழிப்பானகாலமாக இருந்தது.
பின்னர் உதிரியாக ஓரிரு வெளியீட்டு முயற்சிகள்இருந்தன. ஆனால் அவை தாக்குப்பிடிக்க முடியவில்லை. இப்பொழுதும் சில இருக்கின்றன.அவற்றின் வெளியீடுகளின் தரம் குறித்த விமர்சனங்களுமிருந்து கொண்டிருக்கிறது.இப்பொழுது இந்தியாவில் இயங்கும் வடலிதான் ஓரளவு சிறப்பான பங்களிப்பை வழங்கிவருகிறது.
இந்தத் தேக்கத்தை இல்லாமல் செய்து ஒரு முன்னோக்கிய உந்துதலிற்கானசிறு எத்தனங்களைச் செய்யப் பல காலத்திலும் பலரும் முயன்றிருக்கிறார்கள். யாருக்கும் எதிர்பார்த்தபலன் கிட்டியிருக்கவில்லை. இப்படித்தான் அண்மையில் இதே போன்றதொரு எத்தனத்திற்கானகலந்துரையாடல் யாழ் சிகரம் ஊடக கற்கை நிலையத்தில் ற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நான் சற்றுத் தாமதமாகவே சென்றிருந்தேன்.உள்ளே நுழையகவிஞர் சோ.பத்மநாதன் விலங்குப் பண்ணை நாவல் பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார். பிறகு ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்வில்லங்கமான அரசியல் கதைக்க தொடங்கினா. நான் எழுந்து வெளியில் வந்து விட்டேன். ரு வைத்தியரும் உரையாற்றினார். சற்றுத்  தாமதித்து நுழையடான் ரிவி குகநாதன் ஏதோ நகைச்சுவையாக தனது கருத்தை சொல்லிக் கொண்டிருந்தார்.எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர். முன் வரிசையிலிருந்த பேராசிரியர்ரட்ணஜீவன் கூல் கதிரை உடைந்து கீழே விழுந்தார். நான் இரண்டு தேநீர் பருகினேன்.இதனைத் தவிர்த்தால் அங்கு அன்று எதுவும் கதைக்கப்படவில்லை. கலந்துரையாடப்படவுமில்லை.இப்படியாக யாழ்ப்பாண பதிப்பக முயற்சிகள் இன்னும் ஆரம்பிக்காமல்அல்அதற்காக இன்னும் கலந்துரையாடப்படாமலும் இருக்கிறது. 


நன்றி - யோ.கர்ணன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக