புதன், டிசம்பர் 21

இரு வேறு நகரங்களின் கதை!


நன்றி - பதிவுகள்.கொம்


வெங்கட் சாமிநாதன் - 


கவிதை என்ற சொல் உச்சரிக்கப்பட்ட கணமே அது மொழியின், கற்பனையின், வாழ்வின் முக மலர்ந்த தோற்றத்தைத் தான் நம் மனதில் எழுப்பும். ஈழ வாழ்க்கையில் அது அப்படியாக இருக்க வில்லை. ஈழத் தமிழர் கவிதை முக மலர்ச்சியை, வாழ்வின் குதூகலத்தைப் பேசி தலைமுறைகள் பலவாகிக்கொண்டு வருகின்றது. . இன்றைய ஈழத் தமிழ்க் கவிதை தமிழகக் கவிதையிலிருந்து முற்றிலும் வேறு பட்ட முகத்தைக் காட்டுகிறது. மாறுபட்ட மொழியை, மாறுபட்ட விதி வசத்தை, மாறுபட்ட வரலாற்றை,ப் பேசுகிறது. ஈழத் தமிழர் வாழ்க்கையும் அனுபவங்களும் தமிழக வாழ்க்கை என்ன, வரலாற்றின் எந்த நாட்டு மக்கள் தொகையின் வாழ்க்கையைப் போலும், வரலாற்றைப் போலும் அல்ல. நாடிழந்து, மொழியிழந்து, வாழும் யூத மனிதக் கூட்டம் தான் ஈழத்தமிரை நினைவூட்டும். இன்று ஈழத் தமிழர் வாழ்வையும் இழந்து நிற்கின்றனர்.

சரமக் கவிகள் என்கிறார் அகிலன் தன் கவிதைகளை. அவர் பத்தாண்டுகளுக்கு முன் எழுதிய கவிதைகள் பதுங்கு குழி நாட்கள்- ஐப் பேசுபவையாகத் தான் தந்திருக்கிறார். இப்படித் தான் ஒரு இளம் கவிஞனின் வாழ்க்கை அனுபவங்கள் இருக்கிற தென்றால் அங்கு மனம் குதூகலித்துக் கவிதை பாட, முகம் சிரித்துத் தன் வாழ்க்கையைக் கொண்டாட, சக மனிதனிடம் மலர்ந்த முகம் காட்ட என்ன இருக்கக் கூடும்?.

அன்று “ தெருவோரம் நாய் முகரக் கிடந்த தன் நண்பனின் மரணம் செவிப்பட்டது. தன் நன்பண் தெருவோரம் நாய் முகரக் கிடந்தான். அது செய்தியாகத் தான் செவிப்பட்டது. ஏனெனில் அந்நாட்கள் ஊரில் மகிழந்துலாவிய நாட்கள் அல்ல. உயிர் தப்ப பதுங்கு குழியில் ஒடுங்கிக் கிடந்த நாட்கள்.

இரு தலைமுறைக் காலமாக வாழ்க்கையின் அவலங்கள் தீவிரமாகைக் கடந்து வந்து விட்டன. இன்று

பாதமற்ற கால்களால்
வாழ்வைக் கடந்து செல்கிறார்கள்
நாதியற்ற மக்கள்.

ஏனெனில்

முன்னர் இங்கிருந்த கிராமமோ
முன்னர் இங்குர்ந்த வீடுகளோ

இன்றில்லை. மருத்துவக் கூடங்களில்,

காலுக்கொரு தலையும்
தலைக்கிரு கண்களும்

தான் காணக் கிடைக்கின்றன.

தமிழக மக்கள் வாழ்க்கை கவிதகளாக ஆவணப் படுத்தப் பட்ட அந்த கவிதைத் தொடக்க காலத்தில் வாளடி பட்டு வீழ்ந்து கிடக்கும் தன் மகனைத் தேடிய தாயைப் பற்றிப் பாடிய பாடல் உண்டு. அந்தத் தாய தேடிய இடம் தன் ஊரல்ல. அது தன் ஊரை விட்டு ஒதுங்கிய ஒரு போர்க்களத்தில்.

இன்று போர்க்களம் தேடிப் போகவேண்டியதில்லை.

முன்னரிங்கிருந்தன வீடுகள்
.முன்னரிங்கிருந்த கிராமம்

என்று திகைத்து நிற்கும் காலம். வாழ்ந்த ஊரே போர்க்களமாகிக் கிடக்கிறது. உயிர் காப்பாற்றும் மருத்துவ மனைகள் பிணக் கிடங்காகிக் கிடக்கும் நாட்கள் இவை.

ஊர் தேடி, வீடு தேடி வந்துவிட்ட மரணம் குவிந்து கிடக்கும் போர்க்களத்தில் கிடப்பவை

மணிக்கட்டுகள் சில்அ முழக்கைகள் சில்
அங்குமிங்குமாய் உடைந்தும் கிழிந்தும் வேறு பல

ஒன்றெடுத்தேன்
பிராயம் இருபதுக்கும் மேல் ஆண்கை
முரட்டு விரல்கள்

நெடிய ஆயுள் ரேகை கைவிட்டிறங்கி
மேலும் பயணமானது

இறக்கிப் பார்த்தேன்
பச்சையால் குத்தியிருந்தான்

“சஞ்சுதா”

இப்படித்தான் அடையாளங்கள் காணப்படுகின்றன, சிதைந்த உடல் பாகங்களைக்கொண்டு. நாடற்றுப் போய், பேச்சற்றுப் போய், வாழ்வற்றுப் போய், கடைசியில் தன் அடையாளமுமற்றுப் போய் விட்ட நிலை.

முண்டத்திற்கு மேலும் கீழும் ஒன்றுமில்லை
இரத்த வெடில்
சிதம்பழுகிய உடலைத் தொட முதல்
முறிந்தன என்புகள்

“குழந்தைகள் போலும்”

மூடையாய்க் கட்டிய பின்
ஓரமாய்க் குவிக்கத் தொடங்கினோம்.

”குவிந்த மலர்ச் சிரிப்பைக்” காட்டிய முகங்கள், ”ஆடி வரும் தேனா”யிருந்தவை இன்று “குழந்தைகள் போலும்” என்று யூகித்து மூட்டையாய்க் கட்டி ஓரமாய்க் குவிக்க வெண்டிய முண்டங்களாகி விட்டன

சொல்லிக் கொண்டே போகலாம். திரும்ப புறநானூ.ற்றுப் பாடல்கள் எழுதப்படுவதாகத் தோன்றும். தொடக்க காலத்திலேயே போர், மரணம், வாள் என்று தமிழ்க் கவிதை பேசத் தொடங்கிவிட்டது. அது வீரம் பற்றியும் பேசியது .அதுவே தமிழ்க் கவிதை எல்லாமும் அல்ல. அது ஒரு பகுதி. மாத்திரமே. வாழ்க்கை பற்றியும் காதல் பற்றியும் பேசின தமிழ்க் கவிதையின் பெரும்பகுதி..ஆனால் ,இங்கு அதற்கெல்லாம் ஒரு காலம் வரும் என்றும் தோன்றவில்லை.

வெறிச்சோடின ஒரு நூறாயிரம் ஆண்டுகள்

இனிக்காரணமுமில்லை,
காத்திருக்க எவருமில்லை என்ற போதும்
பின்னும் கிடந்த முந்தின நாட்கள்
தாய் வெந்து முதுமை கிடந்த இடத்தில்

அவனில்லை
அவரில்லை

எவருமில்லை

பாழ்

இந்தப் பாழ் என ஏதுமிருக்கவில்லை முந்திய புறநானூற்றில்

இந்தப் பாழை உருவாக்கிய வேற்றோர் இடமுமுண்டு, மனிதக் கூட்டமுமுண்டு. இப்பாழுக்கு வழிகாட்டியதாகச் சொல்லிக் கொள்ளும் காவியுடை தரித்த புத்த பிக்குகள் தம் ”கருணை” பாலித்த பாழ் இது. அதே புத்த பிரான் பிறந்த நாட்டைச் சேர்ந்தவர்களுக்குத் தான் இந்த புத்த பிக்குகள் இத்தகைய கருணை பாலித்திருக்கிறார்கள். அவர்களது கருணை ஆட்சி தயங்கும், தளரும் காலத்தில் எல்லாம் காவியுடை பிக்குகளும் அவர்தமைக் குருவாகக் கொண்ட அரசும் திரும்ப தம் கருணைக்கு வலிவூட்டியே வந்திருக்கிறார்கள். புத்தர் போன்ற ஒர் கருணையும் சாந்தமும், மெல்லிய புன்முருவலும் கொண்ட கடாட்சம் தரும் இன்னொரு தேவ ரூபம் உண்டா என எனக்குத் தெரியாது. அத் தேவ ரூப சாந்த சொரூபன், புத்தன் தேவனும் அல்லன். தேவனாகிய மனிதன் தான். புத்த பிக்கு காவியுடையும் எங்கும் இதே போன்ற “கருணை” பாலிப்பதும் இல்லை. காவியுடைக்குள் இருக்கும் மனித மனம் சார்ந்தது, சக மனிதனை பிணக்கிடங்காக்குவதும் அவன் வாழ்ந்த இடத்தைப் பாழாக்குவதும். காவியுடைக்குள் இருந்த ஒரு இன்னொரு பிக்கு தான்., காரணம் அவன் பாழாக்கிய சக மனிதன் தன்னைப் போன்று காவியுடை தரித்திருக்கவில்லை. வியத் நாமில் தன்னையே தீயிட்டு மரித்துக் கொண்டான்.இதே போன்று காவியுடை தரித்த ஒரு பிக்கு. அது மனிதம் இழந்த ஒரு அதிகாரத்துக்கு அவன் தெரிவித்த கண்டனம் அந்த ரூபம் பெற்றது. இன்னொன்று அதுவும் அரசு அதிகாரம் தான், இரண்டாயிரம் ஆண்டு முந்திய இன்னொரு காலத்தில் போரை மறுத்தது. ஆனால் இங்கு அந்தக் காவியுடைக்குள் இருக்கும் மனிதன் வேறாகத்தான் இருந்தான். காவியுடை அவனை மாற்றவில்லை. அதிகாரம் வேண்டும், அதிகாரம் செலுத்தும் காவியுடை இது. இரு வேறு உலகங்களை, நகரங்களை உருவாக்கிவிடுகிறது. ஒன்று காவியுடை தரித்தது. இன்னொன்ரு காவியுடை அற்றது.

வேடிக்கை வாணச் சிறுமழையும்
அணிநடை யானைப் பேருலாவும்
படர் நெடும் மின் கொடிச் சரமும்
உங்களிரவை நனைக்கையில்
பொங்கிப் பிரகாசம் கொள்ளும் உங்கள் நகரத்தை
போகமும் போதையும் மிஞ்சித் தள்ளாடும் நள்ளிராக்களை
தூக்கத்தினால் நீங்கள் மூடிப் புரள்கையில்
சன்னங்களாலும் பீரங்கிகளாலும்
உடைத்துத் திறக்கப்படுகிறது
ஊரடங்கிய வேறோரு நகரம்
பசியும் வலியும் தீராப்பீதியும் பீடித்த நள்ளிராக்களில்
பெருக்கெடுக்கும் இரத்தத் தெருக்களை
தூங்காக் கண்களால் கடக்கிறார்கள்
இன்னொரு தலை நகரத்து மக்கள்.

இது இன்றைய ஈழத்தமிழ் கவிஞர் அகிலன் எழுத விதிக்கப்பட்டுள்ள புறநானூற்றுப் பாடல்.

இங்கு வீரமில்லை. ஒன்று மனிதம் இழந்த அதிகாரக் கொடூரம். மனிதப் படுகொலை. இன்னொன்று சதைப் பிண்டங்களாக், அடையாளம் இழந்து மரிக்கும்

நாங்கள் இங்கு தள்ளியிருந்து மௌனித்து வேடிக்கை பார்க்கும் இன்னொரு மனிதக்கூட்டம். இரைச்சலிடும் வீர கோஷங்களே எங்களால் சாத்தியமானது. இங்கும் சரி, உங்கள் நாட்டின் நகர் ஒன்றிலும் சரி, முறுவலித்த சாந்த சொரூப புத்தன் உறைந்து சிலையாகித் தான் கிடக்கிறான். எங்களுக்கு அவன் இரண்டாயிர ஆண்டுகளுக்கும் முந்தி வாழ்ந்த புத்தன். அவன் காலடிகள் எங்கள் வரலாற்றில் நீள வில்லை.
vswaminathan.venkat@gmail.com


நன்றி - பதிவுகள்.கொம்

வெள்ளி, டிசம்பர் 16

நந்தினி சேவியாரின் “நெல்லிமரப் பள்ளிக்கூடம்“ வாசக நோக்கில் சில குறிப்புகள்- இதயராசன்-


Thanks- http://muchchanthi.blogspot.com/2011/11/blog-post.html
THURSDAY, NOVEMBER 3, 2011



சுரண்டல், இனபேதம், சமூக ஒடுக்குமுறை ஆகியவற்றினை சமூக வாழ்நிலை மாந்தர்கள் ஊடாட்டத்தின் மூலம் நெல்லிமரப் பள்ளிக்கூடம் சிறுகதைகளில் வெளிப்படுத்தியுள்ளார் மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர்.
மேய்ப்பன், ஒற்றைத்தென்னை, கடலோரத்துக் குடிசைகள், மனிதம், நெல்லிமரப் பள்ளிக்கூடம், தவனம், எதிர்வு. விருட்சம் ஆகிய எட்டுக்கதைகளும் வறுமை, இனம், சாதி ஆகிய மூன்று சமூகப்பிரச்சினைகளையும் உயிர்ப்புடன் நம்முன் பேசுகின்றன.

அயல்கிராமத்தைச் சேரந்தவர்கள் என்ற சிறுகதைத் தொகுதிக்கு அடுத்ததாக இச்சிறுகதைத் தொகுதி, கொடகே நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் கதையை நீட்டி முடக்காமல் தேவைக்கேற்ப அச்சொட்டாகச் சொல்வதில் வல்லவர். கூடவே எள்ளல் உணர்வுடன் வாசிக்கத் தூண்டுகிறது. இக்கதைகள் எட்டினையும் விமர்சனம் என்றில்லாமல் ஒரு வாசக அனுபவத்துடன், ஏனைய வாசகர்களும் வாசிக்கவும் ஜோசிக்கவும் வைக்கும் நோக்கில் இரசனைக்குறிப்பாக எழுதமுற்படுகின்றேன்.

முதலாவது சிறுகதை – மேய்ப்பன்:
கடலோரத்துச் சிறுகிராமத்தில் தேவாலயம் அமைத்து, தொழிலும் தேவாலயமுமே உலகமாய் வாழ்கின்ற சங்கிலித்தாம் கிறகோரி என்னும் கிழவர், தனது மகன் காணாமல் போனபோது, மருமகள் தெரேசாவை கந்தசாமிக்கு தவிர்க்கமுடியாத காரணத்திற்காக மறுமணம் செய்து கொடுக்கின்றார். இதனை எதிர்த்த ஊர்மக்கள், உறவினர்கள் அவருடன் சேர்த்து தேவாலயத்தையும் ஒதுக்கி விடுகின்றனர். தேவாலயமும் கிழவர் மனதும் பாழ்பட்டுப்போகிறன. இறுதியில் சிதைவுறும் தேவாலயத்தைச் சீர்செய்வதற்காய் மீன்பிடிக்கக் கடலுக்குப்போய், புயலில் சிக்குண்டு உயிர்துறக்கின்றார்.
இங்கு மறுமணம், மதமாற்றம் என்னும் முரண்நிலை யதார்த்தம், தேவாலயத்துடன் பிணைக்கப்பட்ட வாழ்வின் ஊடாக, வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதுபோல் நெருடலின்றி சொல்லப்படுகின்றது. பிரதான பகை முரண்பாடு பின்தள்ளப்பட்டு, உள்முரண்பாடுகள் தோண்டி எடுக்கப்பட்டு மக்களை மோதவிடுவதன் மூலம் பகை முரண்பாடு நேசசக்தியாய்த் தோன்றும் மாயைமயக்கம் இக்கதைவாயிலாக ஆசிரியர் சொல்வது வாசகரைச் சிந்திக்கத் தூண்டுவனவாய் உள்ளது.

இரண்டாவது கதை – ஒற்றைத்தென்னை:
அந்த மீனவக்கிராமத்தில் இரு கிழவர்கள் வசிக்கின்றார்கள். இருவரும் சம வயதினர். அதிரியாரின் மகன் பாலைதீவு படகுவிபத்தில் இறந்துபோகின்றான். அச்சோகத்தினைத் தாங்கமுடியாமல் தவிக்கும்போது, சந்தியாக் கிழவர் அவரைத் தேற்றுகிறார். இதில் உள்ள முரண் யாதெனில், சந்தியாக்கிழவர் தம் குடும்பமே அவ்விபத்தில் இறந்துபோன சோகத்தை வைத்துக்கொண்டே தேற்றுவதுதான். ஒரே வாழ்க்கை முறையில் ஒருவரின் மனம் வைரித்துப்போகின்றது, மற்றது நொந்துபோகின்றது.
கதை இவ்வாறு முற்றுப்பெறுகிறது.
குருநகரில் எதற்குமே அசையாத இரண்டு தென்னைகள்…!
ஒன்று அது. மற்றது…?
சந்தியாக் கிழவன்!
அவளுக்கு உடல் சிரில்க்கிறது.
வாழிடமும் தொழில் முறையும் அதனூடு பெறுகின்ற பட்டறிவும் தனியாளுக்குத் தனியாள் வேறுபடுவது தவிர்க்கமுடியாது. இறப்பு என்பது யதார்த்தமான போதிலும் ஜீவனையே உலுக்ககின்ற சாவு அவனைத் தும்பாக்கிப் போடுகின்ற சோகத்தினையும் அதனைத் தைரியத்துடன் எதிர்கொள்ளும் இன்னொருவரும் காட்டப்படுவதன் மூலம் சிறுசிறு ஏமாற்றங்களுக்காய்த் துவண்டுபோய், தற்கொலை செய்ய அலைபவர்களை விழிப்பூட்டுவதாய் உள்ளது. இதனைக் கற்பனையில் காட்டாமல் அவர்களின் வாழ்வின் மூலமே காட்டுவது, கதாசிரியரின் கருத்தியல் தளத்தின் பலத்தினைக் காட்டுகிறது.

மூன்றாவது கதை – கடலோரத்துக் குடிசைகள்:
மீனவக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த இரு சகோதரர்கள் ஒருவர் மரியசேவியர், மற்றவர் எட்வோட். மரியசேவியர், சுவாமியர் படிப்புப்படிக்க வெளிநாடு சென்று, வெகுகாலத்தின் பின்னர் கிராமத்துத் தேவாலயத்திற்குப் பங்குத்தந்தையாக வருகின்றார். தம்பி தனது மச்சாளைத் திருமணம்புரிந்து, கடற்றொழிலாளியாக வறுமையில் வாடுகின்றான். தமது உழைப்பினைச் சுரண்டும் சம்மட்டியாருக்கு எதிராகக் கலகம் செய்கின்றான். சுரண்டலை ஆதரிக்கும் அத்தனையையும் கேள்விக்கு உட்படுத்துகின்றான். கோவிலும் சுரண்டல் வர்க்கத்திற்குச் சார்பாக இருப்பதால் அப்பக்கமே போகாமல் விடுகின்றான். அண்ணன் பங்குத்தந்தை – தம்பி புரட்சிக்காரன், அண்ணனுக்கு வசதியான வாழ்க்கை விதவிதமான உணவுகள் ஆனால் பசியில்லை. தம்பியின் குடும்பம் பசியுடன் உணவில்லை. இதற்கான காரணத்தைத் தேடுவதாய்க் கதை இயல்பாக நகர்கிறது.
“நீங்கள் செத்தபிறகு வாற சொர்க்கத்தைப் பற்றிப் பேசிறியள்… நாங்கள் இப்ப இருக்கிற நரகத்தைப் பற்றிப் பேசிறம்.. அதை மாத்தப்பார்க்கிறம்…”
உதுகளைப் பேசிறதாலைதான் உங்கட வீட்டிலை வறுமை பஞ்சம்
சுவாமியார் இடைமறித்தார். எட்வேட் சிரித்தான்
“ஒவ்வொரு நாளும் கோவில்லையே பழிகிடக்கிற சந்தியா அண்ணை, பேதுறு அம்மான்… எல்லோருக்கும் இதனாலையே வறுமையும் கஷ்டமும்…?”
“மரங்களின் வேர்களினருகே கோடரிகள் போடப்படுகின்றன.. நற்கனி கொடாத மரங்கள் அத்தனையும் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்…”
எட்டுக்கதைகளிலும் முதன்நிலையில் வைத்துப் பேசப்பட வேண்டிய கதை இது. மதம், அரசியல், வறுமை, சுரண்டல் என்பனபற்றி வாசகரைக் கட்டுடைத்துச் சிந்திக்கத் தூண்டுகின்ற வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது.

நான்காவது கதை – மனிதம்:
இவரது கதைகளில் இக்கதை இரு பக்கங்களைக் கொண்டதாகும். ஷெல் வீச்சில் முத்தரும் மனைவியும் செத்துப் போயினர். அவர்களது கைக்குழந்தையும் அண்ணனும் மட்டுமே தப்பியுள்ளனர். ஊரே சிதைக்கப்பட்ட நிலையில் யார் யாரைப் பார்ப்பது. ஒரு வயோதிபர் வெளியே வந்து கைக்குழந்தையைக் கையேற்கிறார். சிறுவன் தாய் தந்தையரின் உடலத்தை விட்டுச்செல்ல மனமின்றி அங்கேயே இருக்கின்றான்.
“எனக்குப் பசிக்குதுதான்...... நானும் உங்களோட வந்துட்டா ஐயாவையும் அம்மாவையும் காகம் கொத்திப்போடும்....... நீங்க தங்கச்சியைக் கொண்டு போங்க......”
யுத்தத்தின் கொடுமையினை சிறுகச் சொல்லி, பெருக உரைக்கும் கதை – மனிதம் மரிக்கவில்லை என்பதை சாட்சி பகரும் கதை.

ஐந்தாவது கதை – நெல்லிமரப் பள்ளிக்கூடம்:
நெடுத்து வளர்ந்த நெல்லிமரத்தடியில் உள்ள பள்ளிக்கூட்டம், அதில் கல்விகற்ற சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட சிறுவர்களுக்கு ஏனைய சிறுவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டன. கிணற்றில் தண்ணீர் அள்ளியதற்காக ஒரு சிறுவன் ஆசிரியரால் கடுமையாகத் தண்டிக்கப்படுகிறான். அதன் விளைவு அக்கிராமத்துச் சிறுவர்கள் பாடசாலை செல்லாமல், பின்னர் தங்கள் கிராமத்தில் பாடசாலையை நிறுவி பள்ளிக்குச் செல்வதே கதை.
“வாத்தியார்! இவன் கிணற்றுக்கட்டுல ஏறி துலாக்கயிற்றைப் பிடிச்சவன்”
ஜீவகாருண்யம் என்ற பெயரை மட்டுமே சூடியிருந்த மாணவன் முட்டுக்காய்த் தலையரிடம் போட்டுக் கொடுத்தமைதான் கதையின் முக்கிய திருப்புமுனையான அமைகிறது.
இக்கதையில் பொன்னையா வாத்தியார் எனும் அன்புள்ளங் கொண்ட, மாணவர்களால் நேசிக்கப்படுபவரும், முட்டுக்காயர் எனும் பட்டப்பெயர் கொண்ட பஞ்சாட்சரம் வாத்தியார் - இவருக்கு நேர் விரோதமான சாதித் திமிர் கொண்டவராகச் சித்தரிக்கப்படுகின்றார். அமைதியான மாணவர் அநீதிக்கு எதிராக தமது எதிர்ப்பினைப் புலப்படுத்துவதும் அதன் மூலம் ஒடுக்கப்படும் கிராமம் ஒன்று விழிப்புறுவதும் இயல்பாகவே சொல்லப்படுகின்ற போதிலும், சொல்ல வேண்டியவை நிறையவேயுண்டு என்பதை கதையில் சொல்லப்படும் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது. இது ஒரு நாவலுக்கான நகர்வைக் கொண்டுள்ளது எனலாம்.

ஆறாவது கதை – தவனம்:
83 யூலைக் கலவரத்தின் போது புறக்கோட்டையில் இறால் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தமிழர். சக சிங்கள ஊழியர்களால் காப்பாற்றப்பட்டுப் போஷிக்கப் படுவதையும் கலவரத்தின் அவலமும் சொல்லப்படும் கதை இது. அந்தத் துன்பியல் நிகழ்வில் நாமும் அகப்பட்டது போன்ற உணர்வைத் தருகிறது.

ஏழாவது கதை – எதிர்வு:
யாழ்ப்பாணத்தில் யுத்தச் சூழ்நிலையில் தமது மாமனாரின் மரணச் சடங்கினை திட்டமிட்டபடி சமயாசாரப்படி நடாத்த முடியாமல் சவுக்குத் தோப்பில் புதைத்தமையும் மரண வீட்டில் குண்டுவீச்சு நிகழ்ந்த போது தப்பிப் பிழைக்க ஓடிய உறவினர்கள் பின்பு நிஜத்தினை மறந்து,
“அவன் கொமியூனிஸ்காரன் அதுதான் கோயில் சடங்கு செய்யாமல் மாமனைச் சவுக்குமரக் காட்டுக்குள்ள தாட்டுப்போட்டான்”
என்று கூறும் முரண்நிலை யதார்த்தத்தினை இலாவகமாக சிறப்பான கதை கூறல் மூலம் சொல்வது இக்கதையின் வெற்றியாகும்.

எட்டாவது கதை – விருட்சம்:
இலங்கை இனப்பிரச்சினையின் வெளிப்பாடே மதங்கள் மோதிக் கொள்வது. சாதாரண மக்களின் உணர்வினைத் தூண்டுவதும், இதில் புத்தரும் - பிள்ளையாரும் அரச மரத்துக்கு உரிமை கோருவது இலங்கைக்கே உரித்தான பண்பாகும். இதனை மரங்களை நேசிக்கும் ஒரு உள்ளத்தின் மூலம் யதார்த்தத்துடன் இணைத்து, பண்பாட்டுத் தளத்தில் விபரிப்பது அற்புதமாக வாய்த்துள்ளது. இக்கதை நிச்சயமாக சிங்களத்திலும் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டியதாகும்.

“போர்க்காலத்துக்கு முன்னர் ஊரின் பெருவிருட்சங்கள் பல சிறு கோவில்களாக சூலங்களுடன் நின்றநிலைமாறி ஆக்கிரமிப்பின் இன அடையாளங்களாக அரசமரங்களும் அதன் கீழ் புத்தர்களும் உருவாகிவிட்டமையை இவன் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு”
விருட்சங்களே இன அடையாளங்களா......?
பெரு விருட்சங்களின் கீழ் தெய்வங்களை வைத்துப் பூசிப்பதன் மூலம் விருட்சமும் அச்சூழலும் புனிதம் பெறுவதோடு சூழலும் பேணப்படுகிறது என்பது ஏதோ உண்மைதான். ஆனால் சகோதரர்கள் போல வாழவேண்டியவர்கள் அந்தத் தெய்வத்திற்காக ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்துவதுதான் அவலத்திலும் அவலம். இதனை நந்தினி சேவியர் சிறப்பாகவே பதிவுசெய்துள்ளார்.

முடிவுரை :
எனவே இச்சிறுகதைகள் எட்டும், எட்ட முற்படும் எல்லைகளை விட்டகலாதபடியே எம்மையும் ஈர்க்கின்றன. அனைத்து விதமான அவலங்களிடையேயும் மனிதம் மரிக்காமல் இன்னும் உயிர்புடன் உள்ளதையே இக்கதைகள் சொல்லாமல் சொல்லி நிற்கின்றன என்ற வகையில் இச்சிறுகதைத் தொகுதிக்கு ‘மனிதம்’ என்ற தலைப்பிட்டிருப்பினும் பொருந்தும் என்று கூறி, நந்தினி சேவியரிடமிருந்து இன்னமும் துடிப்பான, துல்லியமான கதைகளை எதிர்பார்த்து, தளரா மனத்துடன் முதிர்ந்த கதைகளை இன்னும் இன்னும் வேண்டி நிற்கின்றோம்.
Posted by பாரதி தீட்சண்யா at 11:49 PM


Thanks- http://muchchanthi.blogspot.com/2011/11/blog-post.html

ஞாயிறு, டிசம்பர் 11

யாழ்ப்பாண பதிப்பக முயற்சிகள்

நன்றி - யோ. கர்ணன்
http://yokarnan.com/?p=39


            
சகறணம்துயில்ஆடுஜீவிதம் என நல்ல நாவல்கள் பல அண்மை காலத்தில் வெளிவந்திருக்கின்றன என நான்கேள்விப் பட்டிருக்கிறேன்.இஸ்ரேலியர்களினால் பெருந்தொகை பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்பட்டதைலிபிய முன்னாள் அதிபர் கடாபி கொல்லப்பட்டதை மற்றும் உலகில் நடக்கும் பல புதினங்களைசெய்தியின் வாயிலாக அறிந்து கொண்டிருப்பதை போல இதனையும் இணையத்தளத்தின் வழி அறிந்து மட்டும் கொண்டேன். சில இடங்களில் அட்டைபடத்தையும்பார்க்க முடிந்தது. நேரில் காண முடியவில்லை. காரணம் நான் யாழ்ப்பாண வாசி.
சென்றவாரம்வரை யாழ் புத்தக கடைகளில் சல்லடை போட்டும் இதிலொருநாவலும் கிடைக்கவில்லை. அடுக்கிக்  கிடக்கும் ரமணி சந்திரனின்நாவல்களிற்கிடையிலாவது மறைந்திருக்கிறதா என தேடியும் பலனிருக்கவில்லை.
இந்த நாவல்கள் வெகு காலம் கழித்து மிகச்சிலவாக இங்கு வரக்கூடும். அப்பொழுது சிலவேளைகளில் அவை இணையத்தில் வாசிக்கக் கூட கிடைக்கலாம்.
இப்படித்தானிருக்கிறது யாழ்ப்பாண நிலை. காலச்சுவடுமற்றும் உயிர்மை என்ற நட்சத்திர‘ சஞ்சிகைகள் தவிர வேறெதுவும் ஒழுங்கு முறைப்படி வருவதில்லை. புதுவிசை. புத்தகம்பேசுதுமற்றும் சில எப்பொழுதாவது வருகின்றன.
எல்லா கடைகளிலும் ஜனனிபிரியாமித்திரன் வகையறாக்கள் முன்னுக்குத் தொங்கிக் கொண்டிருக்கின்றன.
இது போல இன்னொரு நிலையுமுண்டு. ஈழநூல்களிற்கானசந்தை வாய்ப்பு. ஈழ படைப்பாளிகளின் நூல்கள் சந்தைப்படுத்தப்படுவதில் பெரியசிரமங்களை எதிர் கொள்கின்றன. அனேகமான எல்லா ஈழப்படைப்பாளிகளும் அனேகசந்தர்ப்பங்களில் இந்த நிலை பற்றி சொல்லிக் கொண்டுதானிருக்கின்றனர்-சந்தைபடுத்துவதில் தாம் எதிர் கொள்ளும் சிரமங்கள் பற்றி. அதில் நிறைய உண்மையுமுண்டு. அண்மையில்வடலி பதிப்பாளர் அகிலனிற்கு நேர்ந்த ஒரு அனுபவத்தைச்சொன்னார். அவர்இந்தியாவிலிருந்து இலங்கை வரும் போது தனது பதிப்பகத்தால் வெளியிடப்பட்டபுத்தகங்களின் சில பிரதிகளைக்கொண்டு வந்திருந்தார். அதனைப்பூபாலசிங்கம் புத்தகசாலைக்குக்கொடுக்கச் சென்றபோது அவர்கள் மறுத்து விட்டார்கள்.
ஆனாலும் சில காலத்தின் பின் அந்தப் புத்தகங்கள் அந்தக்  கடையில் இருந்தன. அவர்கள் இந்தியாவில்தான்கொள்வனவு செய்வது என்ற ஒரு முடிவுடன்தானிருக்கிறார்களே தவிரநூல்களைப் பார்த்து வாங்குவதென்ற நிலையிலில்லை.
இந்த இரண்டு சம்பவங்களிற்கும் காரணம் மிகத்தெளிவானது. இந்திய கலாசார மற்றும் பண்பாட்டுத் தாக்கம். இதே விதமான நெருக்கடியை தாம் மலேசியாவில் எதிர் கொள்வதாக ண்மையில் இலங்கை வந்திருந்த நவீனும் சொல்லியிருந்தார்.
இந்திய பண்பாட்டின் தாக்கம் நாம் முயன்றாலும்விடுபட முடியாத அளவிற் தானிருக்கிறது. இது நமக்கு மட்டுமே உ ரிய பிரச்சனையல்ல.உபகண்டத்திலிருக்கும் மற்ற எல்லா சிறிய இனங்களும் இந்தக் கலைகலாசார, பண்பாட்டு நெருக்கடியை எதிர் கொள்கின்றன. இது கூட ஒருவிதமானஆக்கிரமிப்புதானென நண்பர் ஒருவர் சொன்னார். அவர் இதற்குப் பாவித்த பெயர் பண்பாட்டு ஆக்கிரமிப்பு‘. மலேசியாவில் தாமும்இதே விதமான நெருக்கடிகளை எதிர்கொள்வதாக அண்மையில் இலங்கை வந்திருந்த வல்லினம்ஆசிரியர் நவீனும் குறிப்பிட்டிருந்தார்.
நமது விருப்பம்ரசனைநாகரிகம்அனைத்தும் இந்தியாவில்தான் தீர்மானிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இலங்கையின்வானொலிகளைத் தவிர மிகுதி வேறெந்த ஊடகத்துறையும் தலையெடுக்க முடியாமல்த்தானிருக்கிறது. அல்லது இந்திய போட்டியாளர்களைபின் தொடர்பவையாகத் தான் இருக்கின்றன. வானொலிகள் மட்டுப்படுத்தப்பட்டளவு தூரவீச்சு அலைவரிசையைப்பாவிப்பதனால் அவை தப்பித்தனபோலும். ஆனாலும் சக்தி பண்பலை வானொலியில் நிகழ்ச்சி தயாரிப்பிற்கான முக்கியபொறுப்பில் இருப்பவர் ஒரு இந்தியர். இது குறித்த ஒரு புகாரை யாரோ ஒருவர் சிலகாலத்தின் முன் பத்திரிகையில் எழுதியிருந்தார். தவிரவும் பல பண்பலை வானொலிகளைமுதலில் கேட்கும் ஒருவர் இது இந்திய ஒலிபரப்பா அல்லது இலங்கை ஒலிபரப்பா என்றுநிச்சயம் குழப்பமடைவார்.லிபரப்பாளர்கள்-குறிப்பாகப் பெண்கள் - இந்திய பாணியிலான உச்சரிப்பையே கையாள்வார்கள். ஒரு வானொலி நண்பர் சொன்னார்இது தவிர்க்க முடியாதது. அப்படி பாவித்தால்தான் நிலை பெற முடியும் என.
நமது அமைவிடம் மற்றும் வேறு பல வரலாற்றுகாரணங்களின் நிமித்தம் இந்த விபத்து நேர்ந்து விட்டது. ஆயினும் நாம் ஓரளவுசுயாதீனத்திற்கு முயற்சிக்க வேண்டாமா என்ற கேள்வியிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் பலரிற்குவசந்தம் என்ற பெயரில் ஒரு தொலைக்காட்சி இருப்பதே தெரியாது(அதைப் பார்த்து எதுவும் ஆகப்போவதில்லை என்பது வேறு விசயம்). பல நண்பர்கள் சொல்வார்கள்- வீடுகளில் இலங்கை ஊடகங்களின் செய்தியறிக்கையைப் பார்க்க போராடவேண்டியிருப்பதாக. அனேக செய்தியறிக்கை நேரங்கள் மாலை ஏழுமணியை அண்மித்திருப்பதால்தமது வயோதிப தந்தைமார்-குறிப்பாக திராவிட பாரம்பரியத்தில் ஊறியவர்கள்- இந்திய அலைவரிசைகளில்தான்செய்தி பார்க்க வேண்டும் என அடம்பிடிப்பதாக. திராவிட இயக்கங்களின் வருகை கூடஇப்படித்தான் நிகழ்ந்திருக்கிறது. இலங்கை குறித்த ஒரு பரபரப்பான அல்லது முக்கிய செய்திஇலங்கை ஊடகம் ஒன்றில் சொல்லப்பட்டுக்கொண்டிருப்பதற்கு சாத்தியமுள்ள பொழுதில் தனது வீட்டினர்இந்திய தொலைக்காட்சியொன்றில் கனிமொழிக்கு பிணைகிடைக்குமா இல்லையா என்றசெய்தியையோ நாமக்கல்லில் கோழிகளிற்குப் பரவும் தொற்றுநோய் பற்றியோ வைத்தவிழி வாங்காமல் பார்த்துகொண்டிருப்பதாக ஒரு நண்பர் அண்மையில் புலம்பினார்.
இதனால்தான் இங்கு ஈழத்துகாந்திஈழத்துசௌந்தரராஜன்ஈழத்துசிவாஜி,பெண்சிவாஜி எல்லாம் உருவாக முடிந்தது.
இலக்கியத்தின் நிலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பலமானஎதிரியை எதிர் கொள்ள முடியாமல் அவை எப்போதோ சரணடைந்து விட்டன. ஆரம்பத்திலேயேகுறிப்பிட்டது போல ஈழக்கடைகளில் இலங்கை புத்தகங்கள் வாங்குவது அல்லது நல்ல புத்தகங்கள்(இதற்குள் இந்திய புத்தகங்களும் அடக்கம்) ஆச்சரியமான ஒரு நிகழ்வே. இலங்கையில்சில சஞ்சிகைகள் வரத்தான் செய்கின்றன. இன்றை திகதியில் இலங்கையில் வரும் அனேக சஞ்சிகைகளிற்கு இருக்கும் ஒரே பெருமை- தொடர்ச்சியான வருகை என்ற ஒன்று மட்டுமே. அதைத் தவிர்த்தால்பெரும்பாலானவற்றில் எதுவுமில்லை. ஊரில் இருக்கும் சங்கக்கடைகளை உங்களிற்குத் தெரிந்திருக்கும். நிவாரணநேரத்தில் ஊர் விதானையின் கையெழுத்துடன் அந்த அந்த ஊர் சங்கக்கடைகளிற்கு மட்டுமே போக வேண்டும். அங்கு மட்டுமே சாமான் கிடைக்கும். எனக்குஇந்த சஞ்சிகைகளை பார்க்க அந்த நினைப்புத்தான் வரும். பலதும் கிராம சஞ்சிகைகளாக மட்டுமேவருகின்றன. வந்ததும் பணச்சடங்கு நிகழ்வு போல ஊரிலுள்ளவர்களைக் கூட்டி வெளியீட்டு விழாநடத்தி அந்த பணத்தைப் பெற்று கொள்கிறார்கள். பலரும் கடைகளிற்குக் கொடுத்துத் தான் பணம் சேர்க்க வேண்டும்என்ற நிலையில் இல்லை.
இந்த வகையான போக்கிருக்கையில் புத்தகக் கடை உரிமையாளர்களையும்குற்றம் சொல்ல முடியாது. அவர்கள் வாசகர்கள் அல்ல. வியாபாரிகள் மட்டுமே. ஈழத்திற் பூக்கும் அத்தியை அவர்கள்கண்டுபிடிக்க வேண்டும் என எதிர்பார்க்கவும் முடியாது.
யாழ்ப்பாணத்தில் செழிப்பான ஒரு புத்தக பண்பாடு இருந்தது என்று சொல்லமுடியாவிட்டாலும் ஓரளவு சிறப்பான நிலை முன்னொரு காலத்தில்‘ இருந்திருக்கிறது.ஈழகேசரி பண்ணை பல ஈழத்துப்படைப்பாளிகளை அறிமுகம் செய்திருந்தது. பின்னர் முன்னர் போலஅல்லாவிட்டாலும்  வீரகேசரிமீரா, அலைதேசிய கலை இலக்கியப் பேரவைபுலிகளின் வெளியீடுகள் என நல்ல பல நூல்கள் வந்திருந்தன. அது ஒரு செழிப்பானகாலமாக இருந்தது.
பின்னர் உதிரியாக ஓரிரு வெளியீட்டு முயற்சிகள்இருந்தன. ஆனால் அவை தாக்குப்பிடிக்க முடியவில்லை. இப்பொழுதும் சில இருக்கின்றன.அவற்றின் வெளியீடுகளின் தரம் குறித்த விமர்சனங்களுமிருந்து கொண்டிருக்கிறது.இப்பொழுது இந்தியாவில் இயங்கும் வடலிதான் ஓரளவு சிறப்பான பங்களிப்பை வழங்கிவருகிறது.
இந்தத் தேக்கத்தை இல்லாமல் செய்து ஒரு முன்னோக்கிய உந்துதலிற்கானசிறு எத்தனங்களைச் செய்யப் பல காலத்திலும் பலரும் முயன்றிருக்கிறார்கள். யாருக்கும் எதிர்பார்த்தபலன் கிட்டியிருக்கவில்லை. இப்படித்தான் அண்மையில் இதே போன்றதொரு எத்தனத்திற்கானகலந்துரையாடல் யாழ் சிகரம் ஊடக கற்கை நிலையத்தில் ற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நான் சற்றுத் தாமதமாகவே சென்றிருந்தேன்.உள்ளே நுழையகவிஞர் சோ.பத்மநாதன் விலங்குப் பண்ணை நாவல் பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார். பிறகு ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்வில்லங்கமான அரசியல் கதைக்க தொடங்கினா. நான் எழுந்து வெளியில் வந்து விட்டேன். ரு வைத்தியரும் உரையாற்றினார். சற்றுத்  தாமதித்து நுழையடான் ரிவி குகநாதன் ஏதோ நகைச்சுவையாக தனது கருத்தை சொல்லிக் கொண்டிருந்தார்.எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர். முன் வரிசையிலிருந்த பேராசிரியர்ரட்ணஜீவன் கூல் கதிரை உடைந்து கீழே விழுந்தார். நான் இரண்டு தேநீர் பருகினேன்.இதனைத் தவிர்த்தால் அங்கு அன்று எதுவும் கதைக்கப்படவில்லை. கலந்துரையாடப்படவுமில்லை.இப்படியாக யாழ்ப்பாண பதிப்பக முயற்சிகள் இன்னும் ஆரம்பிக்காமல்அல்அதற்காக இன்னும் கலந்துரையாடப்படாமலும் இருக்கிறது. 


நன்றி - யோ.கர்ணன்