புதன், ஏப்ரல் 18

ஒரு சிறு தீப்பொறி - சேரன்


நன்றி :- globaltamilnews.net

சென்ற வாரம் நூலகம் நிறுவனத்தினரின் கனடாப் பிரிவினர் ஒழுங்கு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலும் அது தொடர்பான சிக்கல்களும் பறற்றிப் பேச வாய்ப்புக் கிடைத்தது. நூலகம் நிறுவனம் எண்ணிம நூலகம் என்பது மட்டுமல்ல ஈழத் தமிழ் ஆவணங்கள், நூல்கள் மேலும் பல்வேறுபட்ட அறிவுச் சான்றுகளையும் பேணவிழைகிற ஒரு சிறப்பான முயற்சியாகும். எண்ணிம நூலகம் பற்றிய நிகழ்வில் யாழ் நூலக எரிப்புப் பற்றிப் பேசுவதும் தவிர்க்க முடியாமல் போய்விட்டது. அமைப்பாளர்களில் ஒருவர் குறிப்பிட்டது போல, "அப்போது எமது நூலகம் ஏண்ணிம நூலகமாக இருந்திருக்குமானால் எரிப்பு ஏற்படுத்திய்இருக்கும் பாதிப்புக் குறைந்த அளவிலேயே இருந்திருக்கும்". எனினும் அது வேறு காலம். இது வேறுகாலம். என்னையும் என்போன்ற நூற்றுக் ஆயிரக்கணக்கானவர்களையும் அரசியல் என்னும் பெருஞ்சுழலுள் இழுத்துவிட்ட காலம் அது. இப்போது யாழ்ப்பாணத்திலிருந்து வருகிற தகவல்களின்படி, வடபுலத்தை ஆள்வோர் யாழ் நூலகத்தின் கணினிப் பிரிவையும் கழிவுப் பிரிவாக மாற்றுகிற திடீர் ரசவாதம் செய்யும் வல்லமை வாய்த்திருப்பவர்கள் என்றால் தமிழர்கள்உக்கும் நூலகங்களுக்கும் பெரிய அரசியல் பொருத்தப்பாடு இல்லை என்றே தெரிகிறது. இந்த அவலம் எவ்வகையான அரசியல் சுழியைக் கொண்டுவரப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


முப்பத்தொரு முன்பு யாழ்ப்பாணப் பொது நூலகமும் யாழ்ப்பாணப் பட்டினமும் எரிக்கப்பட்ட போது ‘இரண்டாவது சூரிய உதயம்’ என்னும்கவிதையை எழுதினேன். அந்த நாட்களில்தான் யாழ்ப்பாணத்தின் தமிழ் நாளேடான “ஈழநாடு” பணி மனையையும் அச்சுக்கூடத்தையும் தீக்கிரையாக்கினார்கள். ஈழவிடுதலைப் போராட்டம் என்ற வெடிகுண்டின் நீண்ட திரியின் முனையில் அக்கினிக் குஞ்சு ஒன்றை வீசிய காலம் அது.

ஆனால், இன்று இனப்படுகொலை நடந்தேறிய பிற்பாடு சாம்பலின் மீதும் புகையினுள்ளும் சித்தம் குழம்பிய நிலையிலிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் சேர்ந்து நின்று கடந்த ஆண்டுகளை ஆற்றாமையோடு திரும்பிப் பார்க்கிறோம். ஹெயின்றிச் ஹைன் என்கிற அறிஞர் ஒருமுறை சொன்னார்: முதலில் அவர்கள் நூல்களை எரிப்பார்கள். பின்பு மக்களை எரிப்பார்கள். எங்கள் வரலாற்றிலும் அதுதான் நடந்தது.

யாழ். நூலகம் எரியுண்டபோது நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவனாக இருந்தேன். நானும் என்னுடைய நண்பர்கள் பலரும் அப்போது பல்கலைக்கழகத்தின் ‘பாலசிங்கம் விடுதி”யில் தங்கியிருந்தோம். அது உயர்ந்த மாடிக் கட்டிடம். தொலைவிலிருந்து புகை அடர்த்தியாகக் கிளம்புவதைப் பார்த்தோம். துவக்கத்த்தில் என்ன நடக்கிறது என்று தெரியாவிட்டாலும் மிக விரைவிலேயே தகவல் பரவி விட்டது. தீவிர முயற்சி எடுத்தும் எரிந்து கொண்டிருக்கும் இடங்களுக்கு அன்றிரவு எங்களால் செல்ல முடியவில்லை. படையினரின் வெறியாட்டு பயங்கரமானதாக இருந்தது.மறுநாள் காலைதான் செல்ல முடிந்தது. நாங்கள் அங்கு சென்ற போது நூலகம் முற்றாக எரிந்து போய்விட்டிருந்தது. அதனைப் பார்வையிட்டு அதிர்ச்சியிலும் கோபத்திலும் கையறு நிலையில் துடித்துக் கொண்டிருந்த ஆயிரக் கணக்கான மக்கள் எம்மைச் சூழ நின்றனர். இன்னும் பலர் தொடர்ச்சியாக நூலகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

எரிந்துபோன நூலகத்தருகே இருந்த துரையப்பா விளையாட்டரங்கத்தில் தான் தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட நூற்றுக்கணக்கான இலங்கை அரச படையினர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். விளையாட்டரங்கத்தின் பார்வையாளர் பகுதியில் இருந்த உயர்ந்த படிக்கட்டுக்களில் ஏறி நின்று எங்களைக் கேலி செய்தனர் அரச படையினர். அவர்கள் கையில் எதற்கும் தயாராகத் துப்பாக்கி இருந்தது.

“ஐயோ, எல்லாம் போச்சே! பாவம் நீங்கள்” என்று சிங்களத்தில் பேசியபடி எங்களைப் பார்த்துச் சிரித்துச் சிரித்துக் கேலி செய்தார்கள். கவலையில் அழுவது போல வேடிக்கை செய்தார்கள்.அந்தச் சிரிப்பும், கேலியும், களிக்கூத்தும் கொண்டாட்டமும் முப்பத்தொரு ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் பெருமளவில் அவர்களிடம் இருக்கிறது. இரண்டாவது சூரிய உதயத்திற்கு அப்பால் என்னிடம் இப்போது இருப்பது ‘காடாற்று’ என்ற புதிய கவிதைகளின் தொகுதி. சாம்பலிலும் புகையிலும் குருதியிலும் கண்ணீரிலும் அன்று பிறந்த என்னுடைய கவிதை மறுபடியும் அதே இடத்தில் வந்து நிற்கிறது. இனப்படுகொலைக்கும் படுகொலையின் மொழிக்கும் இலக்கியத்தினதும் கவிதையினதும் மறுமொழி என்ன என்பது அகற்றப்பட முடியாத பெருமலையாக நமது சிந்தனையிலும் இதயத்திலும் இருக்கிறது.

இந்தக் காலகட்டத்தின் சாத்தியப்பாடுகள், எமக்கு ஏற்பட்ட ஆழமான மன வடுக்கள், கடந்தகாலம் பற்றிய மீள்பரிசீலனை, அரசியல் சுய விமர்சனம், மானுட விழுமியங்களினதும் மனித நாகரிகத்தினதும் அடிப்படைத் தோல்வி என்பன பற்றிய கருத்தாடல்கள் மெல்ல மெல்ல மேல் எழுகின்றன.

நூலகமும், யாழ்ப்பாணமும், ஈழநாடு இதழும் எரியூட்டப்பட்டமையும் அவற்றையொட்டி மேலும் தீவிரம் பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் அரசியல், எனது கவிதா இயக்கத்துக்கு மட்டுமன்றி எனது இதழியல் ஊடகவியல் செயற்பாட்டுக்கும் ஒரு சிறு தீப்பொறியாய் அமைந்தது. எரியூட்டப்பட்டு மறுநாளே ‘எரிகிறது யாழ்ப்பாணம்’ என்று தமிழிலும் “Jaffna On Fire” என ஆங்கிலத்திலும் துண்டுப்பிரசுர வடிவில் செய்தித்தாளைக் கொண்டு வந்தோம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் அவையின் சார்பிலும் அவர்களுடைய ஓயாத உழைப்பாலும்தான் இது சாத்தியமாயிற்று.சேத விபரங்கள், நடந்த நிகழ்வுகள் பற்றிய விரிவான செய்திகள் போன்றவற்றைத் தாங்கி இவை கல்லச்சு (Cyclostyle) முறையில் தயாரித்து வெளியிடப்பட்டன. யாழ்ப்பாணத்திலுள்ள எந்த அச்சகமுமே இவற்றை அச்சிடப் பயந்த நேரத்தில் கத்தோலிக்கப் பாதிரிமார் சிலருடைய தீவிரமான ஒத்துழைப்பு மூலமே இவற்றை எங்களால் வெளிக்கொணர முடிந்தது. இந்த ஆவணங்களை இப்போது எங்கே போய்த் தேடுவது?

ஈழநாடு இதழ் மறுபடியும் வெளிவரத் துவங்கும் வரை தமிழிலும், ஆங்கிலத்திலும் எரிகிறது யாழ்ப்பாணம் இதழ்களை மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் இரு மொழியிலும் வெளிக்கொணர்ந்தோம். தமிழ் ஊடக மொழியைச் செம்மைப்படுத்துவதிலும் மரபற்ற எனது ஆங்கில உரைநடையைத் திருத்துவதிலும் காலம் சென்ற ஏ. ஜே. கனகரத்னா இரவிரவாக உதவி செய்தார்.போர்க்கால ஊடகவியலில் கால்பதித்த முதலாவது அனுபவம் அது. என்னைப் போன்ற பல மாணவர்களுக்கு அந்தக் காலம் கோபத்துடன் கூடிய ஒரு பெரிய பயில்புலமாக இருந்தது. எனினும் அநியாயமாக அத்தகைய வரலாறே மறுபடி மறுபடி மீள வருகிறது.

இந்த முயற்சிகளில் இரவு பகலாக எங்களோடு ஈடுபட்டவர்களும் நூலகம் எரியுண்ட இரவும் அதற்குப் பிற்பாடும் அயராமல் உழைத்தவர்களும் பின்னர் பல்வேறுபட்ட போராளி அமைப்புகளில் இணைந்து விட்டார்கள். பிற்பாடு பலர் முக்கியமான தலைவர்களாக மாறி விட்டனர். பலர் இன்று விடுதலைப் போரில் கொல்லப்பட்டு விட்டார்கள். சிலர் “காணாமல்” போய் விட்டார்கள்.சிலர் இப்பொழுது புலம் பெயர்ந்து வாழ்கிறார்கள். வேறு சிலர் இப்போது ‘ஜனநாயக’ வழிக்குத் திரும்பி விட்ட அரசியல் தலைவர்களாக இருக்கிறார்கள்(!!!). இன்னும் சிலர் தொடர்ச்சியாக அரசியல் அஞ்ஞாத வாசத்தில் ஆழ்ந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் இன்று நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவர்கள் எல்லோரையும் பெயர் சொல்லி அழைக்கவும் முடியவில்லை.

நூலக அழிப்புக்கும் இன அழிப்புக்கும் இடையில் வெகுதூரமில்லை என்பது உலக வரலாறு எமக்கு ஏலவே சுட்டிக் காட்டிய ஒன்றுதான். ஒன்றிலிருந்து மற்றையதைப் பிரிக்க முடியாது என்பதும் பண்பாட்டுப் படுகொலை, அறிவறிவியல் படுகொலை, மெல்ல மெல்லக் கொல்லும் இனப்படுகொலை என எல்லாமே இனப்படுகொலையின் பல்வேறு முகங்களும் முகாம்களும் தான்.

எனினும் மஹாகவி தனது கவிதையொன்றில் சொல்வது போல “மீண்டும் தொடங்கும் மிடுக்கு” என்பதைத்தான் நாங்களும் சொல்ல வேண்டும்.

சேரன்

(படங்கள் -ஏப்பிரல் 7, 2012; சனிக்கிழமைநேரம்: 5:00 பிப - 8:30 பிபஇடம்: Sri Sathya Sai Baba Centre of Scarborough, Canada (Finch & Middlefield)5321 Finch Avenue EastScarborough, ONM1S 5W2 இல் நூலகம் அறிமுக நிகழ்வுப் படங்கள் நன்றி இளங்கோவின் முகநூல்)

செவ்வாய், ஏப்ரல் 10


இராகவனின் படைப்புகள் வடிவங்களைக் கடந்த வடிவம்
மு. பொ.

நன்றி - காலச்சுவடு ஏப்ரல் 2012



இன்றைய ஈழத்து இளந்தலைமுறை எழுத்தாளர்களுள் மிக முக்கியமானவர்களாக நான் கருதுவது இருவரை. ஒருவர் இராகவன். அடுத்தவர் திசேரா. இவ்விருவரும் தாம் எழுதும் விஷயங்களை ஆழமான தளங்களுக்கு எடுத்துச் செல்வதாலும் அதற்கேற்ற முறையில் வித்தியாசமான எடுத்துச் சொல்முறையைக் கையாள்வதாலும் இன்றைய தீவிர வாசகர்களின் கவனத்துக்குள்ளாகின்றனர். இவர்களுள் இராகவன் ஒரு படி மேலே போய் வழமையான எழுத்தாளர்கள் “கலையற்றவை”யென எவற்றையெல்லாம் ஒதுக்கிவைக்கிறார்களோ அவற்றையெல்லாம் கலைத்துவப்படுத்திக் காட்டியுள்ளார். குறிப்பாக நம் எழுத்தாளர் கையாளச் சங்கோஜப்படும் பாலியல் விஷயங்களை இவர் எடுத்தாண்ட முறை பலவகையான அபிப்பிராயங்களை மேலாட வைத்துள்ளன. சிலரை இது ‘அசிங்கம்’ என அலற வைத்துள்ளது. விஷயமறிந்த இளைஞர் சிலரை ‘இராகவன் அழகாகத்தான் செய்துள்ளார்’ எனப் பாராட்ட வைத்துள்ளது. இன்னும் சிலரை சைகோ என்னும் படத்தில் ஹிச்சாக் தன் கதாநாயகனை மௌனிக்க வைத்துத் தொண்டை மிடறு மேலும் கீழும் போய் வரச்செய்த நிலைமைக்குத் தள்ளியுள்ளது.

அப்படியானால் இராகவனின் எழுத்துக்கள் எத்தகையன? இதற்கான பதிலை அவரது எழுத்துக்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் கேள்விகளுக்குப் பதில் காண்பதன் மூலமே கண்டுகொள்ளலாம்.

முதலாவது, இவரது எழுத்துக்கள் மூளையால் கட்டமைக்கப்படுகின்றன என்னும் குற்றச்சாட்டு.
இரண்டாவது, பாலியல் விஷயங்களை இவ்வளவு பச்சையாக இவர் எழுதுகிறார். இது சிலரைப் படிக்க முடியாமல் செய்துவிடுகிறது.
மூன்றாவது, இராகவன் சொல்முறைக்காகப் பாவிக்கும் விஷயங்கள் கலையோடு எந்தவிதத்திலும் சம்பந்தப்படுத்த முடியாதவை என்ற குற்றச்சாட்டு.

முதலாவது குற்றச்சாட்டான கலையை மூளையோடு சம்பந்தப்படுத்தக் கூடாது என்று சொல்லும் பலர் இன்னும் நம்மிடையே உள்ளனர். இயல்பாகவே உணர்வுகளோடு அதிகமாக இணைந்துகொள்ளும் கலைசார்ந்த படைப்புகளை மூளையோடு - அதாவது சிந்தித்து அதன்வழி அதைச் செப்பனிடும் வேலையோடு - சம்பந்தப்படுத்துதல் கூடாது என்று சொல்பவர்கள் முன்வைக்கும் காரணம்: அப்படிச் சம்பந்தப்படுத்தினால் அது உண்மையான கலைப் படைப்பாக இருக்காது என்பதே. இத்தகைய எண்ணமுடையவர்களில் ஒருவர்தான் கவிஞர் சோலைக்கிளியும். அதனால்தான் அவர் “கவிஞன் என்பவன் யார்? ஆடுகளை மேய்ப்பதைப் போல் கவிதைகளையும் மேய்ப்பவனா? இல்லை. கவிதைகள் தாம் கவிஞனை மேய்க்க வேண்டும். கவிதைகளை எழுதுபவன் கவிஞன் என்பதை விடுத்துக் கவிஞனை எழுதுவதே கவிதைகள்தாம் என்பது இங்கு மனங்கொள்ளத்தக்கது” (மிக அதிகாலை நீல இருள் முன்னுரை) என்று கூறுகிறார். இன்று சோலைக்கிளியினதும் அவரைச் சார்ந்தோரது கவிதைகளுக்கும் நேர்ந்த கதி தெரியும். அவை காலமாற்றம் கோரும் நிமிர்வுக்கு இடங்கொடுக்காது, சோர்ந்துபோய் வீழ்ந்தமைக்குரிய காரணம் அவை மூளையோடு சம்பந்தப்பட்ட விமர்சன உள்விழிப்புக்காட்படாது போனமையே என்று துணிந்து கூறலாம். 
சிறந்த கவிஞனிடம் அல்லது படைப்பாளியிடம் எப்பொழுதுமே விமர்சனம் உள்விழித்திருக்கும் என்பதை எவரும் ஒப்புக்கொள்வர். டி. எஸ். எலியட், எஸ்ரா பவுண்ட், யேற்ஸ் ஆகிய சிறந்த கவிஞர்கள் இதற்கு உதாரணம். எலியட் நவீனக் காலத்தின் சிறந்த விமர்சகராகவும் இருந்தார் என்றால் அதற்குக் காரணம், அவரது கவிதை ஆக்கங்கள் மூளையோடு சம்பந்தப்பட்டிருந்ததே. அவர் கவிதையால் மேய்க்கப்படவில்லை, மாறாகக் கவிதையை மேய்த்து இலக்கிய உலகையும் செம்மைப்படுத்தினார். இன்றைய புதுக்கவிதைப் போக்கிற்கு அவரும் எஸ்ரா பவுண்டும் செய்த பங்களிப்பு பெரிது.


இந்தப் பின்னணியில்தான் இராகவனின் படைப்புகளைப் பார்க்க வேண்டும். வழமையான பழைய பாணியிலேயே அப்பம் சுடுவதுபோல் கதைகளை எந்தவிதச் சுயவிழிப்புமற்றுப் போட்டடிக்கும் நம் இலக்கியப் பிரம்மாக்கள் மத்தியில் இராகவனின் படைப்புகள் அதிரடித் தாக்குதல்களாகவே வந்துவிழுகின்றன. ஒற்றைப்பரிமாணக் கதைசொல்லிகளுக்குப் பல்பரிமாணத்தை நோக்கிய நகர்வுகள் புரியப்போவதில்லை. உதாரணத்திற்கு இவரது ‘மாதிரி வினாத்தாள்’ படைப்பைக் காட்டலாம். இக்கதை சரிநிகரில் வெளியானபோது இளந்தலைமுறை வாசகரிடையே வித்தியாசமான ரசனை அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதன் பிரதி ஏற்கனவே என் கைக்கு எட்டியிருந்ததால் அதை என் இளம் நண்பர்களுக்குச் சுற்றுக்குவிட்ட பின் நடந்த கலந்துரையாடலில் ஒருவர் கூறினார், “நம்ம மூத்த எழுத்தாளர்கள் எவ்வளவுதான் முக்கி முக்கி எழுதினாலும் நமது சமகால அரசியலை இவ்வளவு நேர்த்தியாக அங்கதத்துக்குள்ளாக்கியிருக்க முடியாது. ஆனால் அதைத் தன் வினாத்தாள் ரெக்னிக் மூலம் இராகவன் செய்துகாட்டியுள்ளார்” என்று சரியாகவே கூறினார். மாதிரி வினாத்தாள் அரசியல் விஞ்ஞானம் என்று போடப்பட்டுச் சாக்கோவின் சிந்தனைகள் என்ற பிரிவில் கேள்விகளைத் தொகுக்கிறது. சாக்கோ யார்? அவர் சிந்தனைகள் என்ன என்ற பின்னணி ரசனையைக் கூட்டுவதாகவும் உள்ளது என்றும் மேலும் சிலர் கூறியது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதே. இங்கே ஓர் எழுத்தாளனின் அறிவின் விழிப்பு சொல்முறையில் ஏற்படுத்திய அடிப்படை மாற்றத்தின் மூலம் படைப்பாற்றல் புதிய தளத்துக்கு இட்டுச் செல்லப்படுகிறது.
இரண்டாவது குற்றச்சாட்டு, இராகவன் பாலியல் விவகாரங்களை மிகப் பச்சையாக எழுதுகிறார் என்பது. வேடிக்கை என்னவென்றால் பாலியல் விவகாரங்களையெல்லாம் கோயில் கோபுரங்களிலேயே கொலுவிருத்திக் கலையாகப் போற்றி இறும்பூதெய்திய நம் பெரும் பண்பாடு இன்று அதைப் பற்றிப் பேசப் பயந்து, பேசுவதையே ‘துடக்காக்கி’ வேலிகட்டித் திரைவிழுத்தி அப்படி ஒன்றே இல்லாததுபோல் பாவனை பண்ணிக்கொண்டு அதே நேரத்தில் தன் முழுக் கவனத்தையுமே மறைவாக அதிலேயே குவித்துக் கொண்டிருப்பதுதான் முரண்நகை. பாலியல் விவகாரத்தையே ஓர் ‘இன்மைப் பொருளாக’ப் பாவனை பண்ணிக்கொள்ளும் நம் சமூகம் தன் கவனம் முழுவதையும் அதிலேயே குவித்துள்ளது என்பதை இராகவன் கட்டவிழ்க்கிறார். ஆதிப் பொதுவுடைமைக் காலத்தில் இருந்தபோது மனித சமூகம் கட்டற்ற பாலியல் சுதந்திரத்தோடு இருந்தது. தாய் மகனோடும் தந்தை மகள்மாரோடும் சகோதரன் சகோதரிகளோடும் வேறுபாடின்றி மாறிமாறிப் புணர்ந்தார்கள். ‘நாகரிக விழிப்பு’ ஏற்பட்ட பின்னரே வேறுபாடுகள் பார்க்கப்பட்டன. கட்டுகள் போடப்பட்டன. ஆயினும் நம் கீழைத்தேயப் பண்பாடு ஆண், பெண் குறிகளையே வணக்கத்துக்குரியவையாக வைத்துப் புணர்தலையே சக்தி-சிவம் இணைவாக, ஜீவாத்மா பேராத்மா கலப்பின் குறியீடாக அதன் பல கோணங்களைத் தாந்திரிகம் என்று பெயரிட்டு நடைமுறையாக்கி அதன் போக முத்திரைகளை அழகியலாகவும் ஆன்மீகமாகவும் பார்த்த இப்பெரும் பண்பாட்டு மரபில் வந்த நம் சமூகம் இன்று அதை அசிங்கமானதாகவும் மறைப்புக்குரிய ஒன்றாகவும் பார்க்கிறது. இது பௌத்தம், சமணம், கிறிஸ்தவ மிஷனறி வருகை மொகலாய ஆதிக்கம் என்பனவற்றின் தாக்கமோ? எது எவ்வாறிருந்தாலும் sமீஜ்ஐ ஒரு பொருட்டாகவே எடுப்பதாக இல்லை என்பதுபோல் பாவனை பண்ணிக்கொண்டு மறைவாக முழுக் கவனத்தையும் அதன்மேல் குவித்து அதைக் கட்டித்த மையப்பொருளாக்கியுள்ள நம் சமூகத்தின் மீது இராகவன் மேற்கொள்ளும் அதிரடித்தாக்குதல் அந்தக் கட்டித்துப்போன பால்விவகாரம் என்னும் பனிப் பாறையைச் சிதறவைக்கிறது. அதனால் அது சிதறித் திரவமாகிக் கரைகிறது. அனுமதிக்கப்பட்ட ஏனைய நாளாந்த உலக நடைமுறைகளுக்குள் பால்விவகாரமும் ஒன்றாகித் திரவமாகிக் கரைகிறது, நீர்மைப்படுத்தப்படுகிறது. இது எதிர்காலத்தில் பல சமூக மாற்றங்களுக்கு முன்னோடியாகிறது. இங்கே சுவாரசியமான விடயம் என்னவெனில் இராகவன் நம் கட்டித்துப்போன மையப் பொருளான பால்விவகாரத்தை மட்டும் திரவப்படுத்தவில்லை, அதே பாய்ச்சலில் இன்றைய புனைகதைக்கு விதிக்கப்பட்ட எல்லைகளால் திண்மமாகிவிட்ட புனைகதைகளையும் திரவமாக்கிவிடுகிறார். ‘மநுபுத்திரனின் படைப்புகள்’ என்ற ஆக்கத்தில் மநுபுத்திரனின் கருதுகோள்களில் ஒன்றாக இது வைக்கப்படுகிறது. இதற்கவசியமான இன்னொரு கருதுகோள் ‘புனைகதையின் பால்வழி’ என்ற தலைப்பில் முன்வைக்கப்படுகிறது. இதன்படி பாலுறுப்புகள் மற்றும் கலவி குறித்த விபரணங்கள் மரபொழுங்குகளைத் தகர்த்தெறியும் செறிவுத்தன்மை இருந்தால் மட்டுமே அது புனைகதைகளின் எல்லைகளைக் கடந்தேகும் என்கிறார். இது கேலியும் கிண்டலும் அங்கதமும் நுரைத்துச் செல்லும் ஓட்டமும் நடையுமான போக்கில் சொல்லப்பட்டபோதும் அடிப்படையில் அது நம் கலை இலக்கியப் புனைவுலகில் பாரிய மாற்றத்தைக் கோடிகாட்டி நிற்கிறது.


மேலும் இராகவனின் ‘மநுபுத்திரனின் படைப்புகள்’ ‘எதிர்நோக்கு’ ‘புத்தக அறிமுகம்’ ‘வண்ணத்துப்பூச்சிகள் கொண்டு செல்லும் இதிகாச நகரம்’; ‘நிகழ்வு’ ஆகிய புனைவுகள் ‘கலாவல்லி முதலான கதைகள்’ என்ற தொகுப்பில் இடம்பெறுகின்றன. இவை இவரது படைப்புகளில் முக்கியமானவை. இங்கேதான் பால் விவகாரங்கள் பற்றிப் பச்சையாக இவர் எழுதுகிறார் என்பவர்களின் கருத்துக்கான படைப்புகள் உள்ளன. இக்கதைகளை ஒவ்வொரு தீவிர வாசகனும் ஒரு வரியைக்கூட விட்டுவிடாது படிக்க வேண்டும். படித்து முடித்ததும் அவை மனத்தில் ஏற்படுத்தும் உணர்வுகள் பற்றித் தீவிர விசாரணையை மேற்கொள்வது அவசியம். நான் இவற்றைப் படித்தேன். சடையர் பெருமானின் திருவிளையாடலிலிருந்து காக்கையின் வாழ்க்கை வரலாறு என்பதற்கு மத்தியில் மநுபுத்திரனின் வாழ்க்கைச் சரிதம் பற்றி வாசிக்கத் தொடங்கியபோது, “1996 காலப்பகுதியில் யாழ்ப்பாணம் முற்று முழுதாக இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்திருந்த சமயம் அணு அணுவாகத் தனிமையின் வீரியத்தை உணரத் தொடங்கிய காலத்தில்தான் எதிர்பாராதவிதமாகக் ‘கரமைதுன சங்கிரகம்’ கிடைத்தது என்று ஆசிரியர் கூறும்போது அதிரத் தொடங்கிய என் விலாவெலும்புகள் (இது ஏற்கனவே வர்ணகுலத்தின் ஆண்குறியில் “மமீசு” என்று எழுதப்பட்ட சுருக்கமும் அது ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்று அவன் ஆண்குறி விறைப்புற்றபோது கண்ட விளக்க விரிவும் என் விலாவெலும்புகளின் அதிர்வுக்கான அத்திவாரத்தை ஏற்கனவே போட்டிருந்தது.) மநுபுத்திரனின் ஹலாசனப் பயிற்சியில் இன்னும் மேலெழுந்து, மாண்புமிகு கிளிமூக்கன் மீசையைச் சிரைக்கத் தொடங்கியதிலிருந்து நடிகனின் காதலி ஆட்சிப் பொறுப்பேற்றுத் தனது யோனிமயிரைச் சிரைப்பது வரையில் நிகழ்ந்துள்ள அரசியல் மாற்றங்கள் ஊடாக வந்து ‘புத்தக அறிமுகம்’ என்னும் பகுதியில் “நடிகைகளோடு உடலுறவு கொள்வது எப்படி? என்ற பூமிநாதன் என்பவரின் கேள்விக்கு இந்நூலின் ஆசிரியர் “பூமிநாதா! நடிகைகளோடு உடலுறவு கொள்வதற்கு நீ கருவிலே திருவுடையவனாய் இருக்க வேண்டும்” என்ற பதில் கூறலில் உச்சம் பெறவே, விலாவின் அதிர்வை அடக்க முடியாது வாய்விட்டுச் சிரித்தேவிடுகிறேன்.

இராகவனின் விட்டில் ஓர் அரசியல் பகுப்பாய்வு மற்றும் கலாவல்லி முதலான கதைகள் ஆகிய இரண்டு தொகுப்பிலுள்ள கதைகளை வாசிக்கும் ஒருவன் அவற்றை விட்டுவிடாது ஒவ்வொரு வரியையும் ஆழ்ந்து வாசிக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே கூறியது காரணத்தோடுதான். இவற்றில் பால்விவகாரம் என்ற ஒன்றைவைத்து இராகவன் இன்றைய நமது சமூகத்தையே கதித்தெழ அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்தெறிகிறார். இவற்றை வெளிக்கொணர்வதற்கு அவரிடமிருந்தெழும் மொழிக் கையாள்கை, பல்துறை வாசிப்பின் சிலிர்ப்பு தீவிர வாசகனைப் பிரமிக்கவைக்கும். இவர் ஒரு விடயம் சம்பந்தமாகப் பாவிக்கும் சொல்லை நீக்கிவிட்டு அதற்கு நிகராக வேறொன்றைப் புகுத்த முடியாத மேதைமை மற்றொன்று. இவற்றின் பின்னணியில் இவரின் கதைகளில் காணப்படும் பால்விவகாரங்களுக்கு ஈடாக நான் ஏற்கனவே சில படித்திருக்கிறேன். மேற்கில் பலகாலத்துக்கு முன்னர் வெளிவந்த ஹென்றி மில்லரின் எழுத்துக்கள். இதில் ஒன்று றோட்டில் போகும் பெண்களை ஜன்னல் வழியாகப் பார்த்திருக்கும் ஒருவன் அவர்களின் பெண் குறிகளின் பல்வகைத் தோற்றங்களைக் கற்பனை செய்தல், டி.எச் லாறன்ஸின் லேடி சற்றலீஸ் லவரில் காதலனும் காதலியும் தமது மறைவிடங்களுக்குப் பரஸ்பரம் மலர்சாற்றி மேன்மைப்படுத்தி மகிழ்தல், மேலும் இவை பற்றி எழுதிய ஜேம்ஸ் ஜொய்ஸ், அல்பேர்டோ மோறாவியா, நோர்மன் மெயிலரிலிருந்து ஙிமீணீtஸீவீநீளீs பிஹ்ஜீstமீக்ஷீs என்ற மேற்குலகக் கிளர்ச்சிக் குழுக்களின் கையில் படாதபாடுபட்டு நம் நாட்டு ஷியாம் செல்லத் துரையின் திuஸீஸீஹ் ஙிஷீஹ்வரை வந்து சகஜநிலை எய்திய இந்த நேரந்தான் பால்விவகாரத்தில் இராகவனும் கைவைத்தார். ஆனால் இதில் இவர் கைவைத் தாரோ இல்லையோ ஏற்கனவே இதில் பரிசோதனை செய்தவர்களாகச் சொல்லப்படும் பெரும் உலகச் சாதனையாளர்களையே பெருந்தூரம் தள்ளிவைத்தவாறு நம் உள்ளூர்ப் பிரதேசங்களில் இதில் பரி சோதனைகள் செய்தவர்களாகச் சொல்லப்பட்டவர்களையெல்லாம் தூசாகத் தட்டிவிட்டவாறு இவரது படைப்புகள் பல்பரிமாணம் கொண்டவையாகப் புதிய தளத்துக்கு உயர்வது மட்டுமல்லாமல் இதுகாலம் வரை புனைவு என இருந்துவந்த போக்குகளுக்கே பிரியாவிடை கூறுகிறது. இராகவன் தன் படைப்புகள் மூலம் மேற்கொண்ட இக்கலைச் செயற்பாடு இன்றைய தீவிர எழுத்தாளர்கள், கவிஞர்கள், நாடகாசிரியர்கள் என்று சொல்லிக்கொண்டு தம்படைப்புத் தொழிலில் ஈடுபடும் அனைவரையும் - அவர்கள் ஏற்கனவே நான் கேட்டுக்கொண்டபடி இவரது படைப்புகளை ஆழ்ந்து வாசிக்கும்பட்சத்தில் - நெருக்கடிக்குள்ளாக்குகிறது.

இதை இராகவன் ஏற்படுத்திய முறைதான் தனியானது. எப்படி?
இங்கேதான் நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட இராகவனின் எழுத்துக்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மூன்றாவது குற்றச்சாட்டான, இவரது ஆக்கங்கள் மரபான கதையாடலை முற்றிலும் நிராகரித்து, விளம் பரங்கள், சுவரொட்டிகள், சுலோகங்கள், கடிதங்கள், வினாத்தாள்கள் என்பனவற்றைப் பாவிக்கின்றன என்பதைக் கவனிக்க வேண்டும். இது உண்மை. ஆனால் இவ்வாறு கலைத்துவமற்றவற்றை இராகவனின் கையாள்கை எவ்வாறு கலைத்துவப்படுத்தி உயரச்செய்ததோடு உள்ளடக்கத்தையும் மரபை விட்டெழச் செய்து புனைவுலகத்தையே முற்றுமுழுதாகப் புதிய தடங்களுக்கு அழைத்துச் செல்கிறது என்பதையே இப்படிக் குற்றஞ்சாட்டுவோர் பார்க்கத் தவறுகிறார்கள்.

எப்படி இதைச் செய்கிறார் என்று ஆராய முற்பட்டால் அவரின் ஆற்றல் வியப்பளிக்கும் விதத்தில் விரிவதை எந்த மனத்தடையுமற்றுச் சொல்லுவேன். ஜேம்ஸ் ஜொய்ஸ் சொன்னதுபோல் எத்தனை பேராசிரியர்கள் தம் தலைமயிரைப் பிய்த்துக்கொண்டாலும் கண்டுபிடிப்பது கஷ்டம். காரணம் அத்தகைய வாசிப்பு விரிவு இவர்களிடம் இல்லாமையே.
இராகவனின் கதைகளைத் தனித்து ஒரு வட்டத்துக்குள் முடக்கிவிட முடியாது. ஒன்றைத் தொட்டால் குளத்தில் எறிந்த கல்லொன்று ஏற்படுத்தும் நீர்வளையங்களாகக் கதைக்குள் கதையாய் விரிந்துகொண்டு போவது ஒரு புறமிருக்க, ஒவ்வொரு கதையும் ஒன்றோடொன்று தொடர்புடையதாய் முன்னால் உள்ள கதையைப் பின்னால் வரும் கதை மறுவாசிப்பு செய்வதாய் அல்லது வேறொரு கோணத்தில் விமர்சிப்பதாய்ச் சங்கிலித் தொடராய்ப் பின்னிப்பிணைந்து போவது தனி அழகு. கலாவல்லி முதலான கதைகள் தொகுப்பில் உள்ள ‘மநுபுத்திரனின் படைப்புகள் அல்லது வாழ்க்கைச் சரிதம்’ என்பது வரையறைகளை நீக்கிப் புனைகதைகளைத் திரவமாக்குதல் பற்றிக் கதைக்கிறதென்றால் அடுத்த தொகுப்பான விட்டில் - சமகால அரசியல் பகுப்பாய்வில் உள்ள முதல் கதையான “தேவேந்திரனுடன் உரையாடல்” என்பது புனைகதைகளை ஒழுங்கழிக்கும் என்று அதே கருப்பொருளை வேறுகோணத்திலிருந்து தொட்டுச் செல்வதோடு கார்ல் பொப்பரின் (ரிணீக்ஷீறீ றிஷீஜீஜீமீக்ஷீ) “பொய்ப்பிக்கத் தூண்டுவதே விமர்சனம்” என்று வேறொரு தளத்துக்கு உயர்த்தப்பட்டு “புனைகதைகளின் எதிர்காலம்”, “அவதிச்சக்கரம்” என்னும் இரு கருது கோள்களையும் தேவையான கால அவகாசமெடுத்துப் பொய்ப்பிக்கும் செயல்முறை தொடங்கப்பட உள்ளது என்று முடிப்பது தனி ரசனைக்குரியதாக இருப்பதோடு இவர் எடுத்துக்கொண்ட புனைவுகளைத் திரவப்படுத்தும் நோக்கு இதிலும் தொடர்வதைக் காணலாம்.

நீர்வளையங்களாக விரியும் இவரது கதைப் போக்கிற்குச் சிறு உதாரணமாக இவரின் “அவதி விளக்கக் கடித”த்தைக் காட்டலாம். ஓர் உயிரியால் (பல்லி) அவதிக்குள்ளாகும் இராசேந்திரன் அதிலிருந்து மீள்வதற்கு “உயிரி என்ற இதழில் வந்திருந்த அறிவித்தலைக் கண்டு அதற்கு எழுதிய கடிதமாக இக்கதையில் வரும் “நான்” எனும் இராசேந்திரன் தன் மனைவியோடு உடலுறவுகொள்ள முனைதலும் அதற்குத் தடையாக இருப்பவையும் - அதாவது உடலுறவு கொள்ளும் ஒவ்வொரு சமயமும் படுக்கையறை உத்தரத்திலிருந்து ஒரு பல்லி எச்சமிடுவதால் ஆண்குறியானது உச்ச நிலையில் சுரத்துக்கெட்டுப் போகிறது. மனைவியின் வேட்கை தணிக்கப்படாது அவள் படும் அவஸ்தை ஒரு தனிக் கதை. அதேவேளை உடலுறவின் கோணங்கள், பல்லியின் எச்சமிடலுக்குப் பயந்து போசனவறை, வழிபாட்டறை, குளியலறை என்று புணர்ச்சிக்கான இடங்களை மாற்றிக்கொண்டிருத்தல், மாதவிடாய்க் காலங்கள் உட்படப் புணர்ச்சி வன்புணர்வாய் மாறுதல் இன்னொரு கதை. இதற்கிடையே மனைவியோடு உடலுறவுகொள்ளும்போது தான் பல்லி எச்சமிடுகிறது என்றால் உடலுறவு கொள்ளும் பெண்களை மாற்றிக்கொண்டால் இது தொடருமா என்று கேள்வியோடு இதற்காகப் பெண்கள் சிலரைத் தெரிவுசெய்தமை பின்வருமாறு அமைவது தனிக் கதை.

1. மனைவி அமுதாவின் தங்கை வாதினி
2. அயல் வீட்டில் வசிக்கும் இளம் விதவை கிரிசாந்தி
3. அந்திப் பொழுதில் நகர வீதிகளில் அலையும் விபச்சாரிகள்
4. அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப் பட்ட தம்பியின் மனைவி.
இத்தனை தொல்லைகளுக்குள்ளாக்கிய பல்லி பற்றியும் பல்லி இனங்கள் பற்றியும் ஓர் ஆய்வு ஞிவீsநீஷீஸ்மீக்ஷீஹ் சிலீணீஸீஸீமீறீஇல் வருவதுபோல் விபரிக்கப்படுவது மற்றொரு கதை. பல்லி என்னும் உயிரி எதன் குறியீடு என்பது வாசகர் யூகத்துக்கு விடப்படுகிறது. அடுத்த முக்கியமான விஷயம் இவர் அணுக முற்படும் பெண்கள் இருவரின் கணவன்மார் இனந்தெரியாத நபர்களால் சுடப்பட்டு இறந்தவர்கள். அத்தோடு பல்லியின் தொல்லைகளால் அவதிப்படும் இவர் அதிலிருந்து விடுபட ஆலோசனை கேட்க இவர் அணுகிய உள வளத்துணையாளரும் இவர் காணச் செல்லவிருந்த அன்றே இனந்தெரியாதோரால் சுடப்பட்டு இறந்துபோகிறார். ஈற்றில் பல்லியால் எதிர்நோக்கும் அவதிநிலையிலிருந்து விடுபடுவதற்கான நிரந்தரத் தீர்வை நோக்கிய வழிகளனைத்தும் அடைபட்டுப்போன நிலையில்தான் “உயிரி” 34ஆம் இதழ் கிடைத்தது. அதில் “யாதாவது உயிரியால் தொடர்ந்து அவதிகுள்ளாகிவருபவராய் இருந்தால் அவதிவிளக்கக் கடிதம் ஒன்றை எங்களுக்கு அனுப்பி வைத்தால் அந்த நிலைப்பாட்டிலிருந்து முழுமையாக விடுபடுவதற்கான தீர்வொன்றை முன்மொழியக் காத்திருக்கிறோம்” என்ற அறிவித்தலை வாசித்த பின்னரே “உயிரி” இதழாசிரியருக்கு இந்த அவதி விளக்கக் கடிதம் அனுப்பப்படுகிறது. ஆனால் என்னே துர்ப்பாக்கியம்! “உயிரி”யும் 34ஆம் இதழோடு நின்றுபோய்விடுகிறது. என்றாலும் கதை முடியவில்லை, கதையின் பிற்குறிப்பு பின்வருமாறு அமைகிறது: “தவிர்க்க முடியாத காரணங்களால் உயிரி 34ஆம் இதழோடு நின்றுபோயிற்று. அன்பான வாசகர்களே! இராசேந்திரனின் அவதிவிளக்கக் கடிதத்தை வாசித்து முடித்ததும் அவதி நிலையிலிருந்து முழுமையாக அவனை விடுவிப்பதற்கான யாதாவது தீர்வினை முன்மொழிய வேண்டுமென உங்களுக்குத் தோன்றினால் இராசேந்திரன் முகவரிக்கு ஒரு கடிதத்தை எழுதி அனுப்புங்கள்” என்று முடிகிறது. ஆனால் இது இத்துடன் முடிந்துவிட்டது என்று சொல்லிவிட முடியாது. அதன் எச்சம் ஏதாவது வேறொன்றோடு எங்கோ ஒட்டிக்கொண்டு இன்னொன்றாகத் தொடரலாம்.

ரஷ்யக் கவிஞன் மயக்கோவ்ஸ்கி, சுவரொட்டி விளம்பரங்களையும் கவிதையாக்கினார், லத்தீன் அமெரிக்க எழுத்தாளன் லூயி ஃபோர்ஹெஸ் புத்தக விமர்சனங்களையும் சிறுகதையாக்கினார். காஃப்காவின் கரப்பான் பூச்சியாக மாறும் மனிதன் மற்றும் அவரது விசாரணையில் வரும் கதாபாத்திரம் தன் ஆண்குறி வெட்டப்பட்டதோடு கதை முடிவை எட்டுதல், இன்னும் இவை கனவிலா அல்லது நனவிலா நடைபெறுகின்றன என்பதை பிரித்தறிய முடியா அபூர்வப் பிற்புலக் கவிப்பு, மு.தவின் ஆழமான கருத்தியல் பின்னணியில் நிகழ்த்தப்படும் தொழுகையின் பின்னணியில் எஸ். பொவின் தீ, உமா வரதராஜனின் மூன்றாம் சிலுவை, சாருநிவேதிதாவின் ஸீரோ டிகிரி எஜ்ஸிஸ்டன்சிலியமும் பேன்சி பனியன் ஆகியவற்றைப் படித்தால் பின்னவை வெற்று மீஜ்லீவீதீவீtவீஷீஸீவீsனீ ஆகுதல், ஜேம்ஸ் ஜொய்சின் டப்லினேர்சைப் படித்த ஆனந்தத்தில் யுலிசெஸ்ஸைப் படிக்க முற்பட்டபோது நேர்ந்த வியப்பு, பின்படிக்க முடியாத பின்வாங்கல் சல்மான் றுஷ்டியின் மிட்னைற் சில்றனில் காணப்படாத, சாத்தானின் வாசகத்தில் காணப்படும், படிக்க முடியாமல் செய்யும் யீஷீக்ஷீவீதீவீபீபீமீஸீ stஹ்றீமீ, கோணங்கியின் ஆரம்பகாலக் கதைகளைப் படித்த சந்தோஷத்தில் உப்புக் கத்தியில் மறையும் சிறுத்தையைப் படித்தபோது ரேகை சாஸ்திரம் தெரியாதவன் தன் வெறுங்கையின் கோடுகளைப் பார்த்துச் சிரிப்பது போன்ற நிலை, பின்னர் ஒருமுறை கோணங்கியை லண்டனில் சந்தித்தபோது “உங்கள் ‘பாழி எந்தவித மெசேஜ்ஜையும் தருவதாய் இல்லை’ என நான் கூற, இத்தனையாவது பக்கத்தைப் படித்த பின் இத்தனையாவது பக்கத்தைப் படித்துப்பார்த்தால் விளங்கும் என்று பக்கங்களின் எண்ணிக்கையைத் தந்தபோது “இப்படித்தான் அர்த்தம் புரிய வேண்டும் என்றால் அதில் அர்த்தம் இல்லை” என்றபோது அவர் அதை எதிர்த்து ஏதாவது கருத்தை முன்வைப்பார் என்று நான் நினைக்க அவர் அத்தகைய அறிவார்ந்த தன்மை இல்லாது சிரித்துக்கொண்டிருந்தது எனக்குத் தந்த சோர்வு, ரஞ்சகுமார் அவரது கலைத்துவ உணர்வு எழுத்துநடை பற்றிக் கதைக்கும்போது கல்கியின் நாவல்களை நினைவூட்டுவதால் ஏற்படும் அதே சோர்வு. இவர்கள் தம் உள்ளுனர்வின் உந்துதல்களால் கலையுணர்வு பெறுபவர்கள் போலும் - அதாவது வெங்கட்ராமனின் காதுகள் நாவலில் வரும் பாத்திரத்தின் காதில் வந்துவிழும் விசேட ஒலிகளை இவர்கள் உள்வாங்குபவர்கள் போலும்.

ஆனால் இராகவனின் கதைகளின் பரப்பெல்லை மேலே குறிப்பிட்டவற்றைவிட இன்னும் வித்தியாசமானது. இவர் மூளையால் எழுதுகிறார் என்பதன் அனுகூலத்தை இவ்வாறு நான் மேலே குறிப்பிட்ட புனைவுகளோடு ஒப்பிடும்போதுதான் காணலாம். இவரது பரப்பெல்லை விரிந்து, ஏனைய கதைசொல்லிகளையெல்லாம் ஒதுக்கியவாறு புதிய தளத்துக்கு உயர்வதன் காரணம் இதுவே. “பெண்ணாக வந்ததொரு மாயப் பிசாசாம்” என்று தொடங்கி “புண்ணாங் குழியிடைத்தள்ளி” என்று பட்டினத்தடிகளின் வரிகளைப் புனிதமாக எடுத்தோதும் நம்மவர்கள் இதேவகையான சொல்லாடல்களை எழுத்தாளன் ஒருவன் பாவித்தால் முகத்தைச் சுழிப்பதுதான் வேடிக்கை. சொற்கள் என்பவை நிர்க்குணமானவை; அவற்றில் குணத்தை ஏற்றுபவன் மனிதன்தான். இங்கே இராகவன் நம் மர்ம உறுப்புகளை அவை தொடர்பான சித்திரவதைகள், மனப் பிறழ்வுகள் பற்றி விவரிக்கும்போது அவற்றின் பாவிப்பின் பல்பரிமாணத்தால் பொதுமையாக்கப்பட்டு, நீர்மைப்படுத்தப்படும்போது இது பெரும் படிமமாக, பெருங்கருத்தியலாக விரிகிறது. அடக்கப்பட்ட உணர்வுகளுக்கு விடுதலை, இது காலம்வரை பிரிவுபடுத்தப்பட்டு இயங்கிய அனைத்துத் துறைகளும் மரபு முறைகளும் ஒருமையுறும் பெருங்கருத்தியல், பெருங்கவிதையாக விரிகிறது.

இங்கே குப்பிழான் ஐ. சண்முகன் கூறும் ‘வடிவங்களைக் கடந்த வடிவம் இனி வரப்போகும் இலக்கிய உருவம்’ என்று இராகவனின் படைப்புகள் தொடர்பாகக் கூறுவது மிகச் சரியானதே. ஆழமாக இவர் கதைகளைப் படிக்கும் எவரும் இதை உணர்வர்.
நன்றி - காலச்சுவடு ஏப்ரல் 2012