சனி, நவம்பர் 12

போகிற போக்கில் - எனக்குப் பிடித்தவற்றில் இருந்து....





எஸ். ராமகிருஸ்ணன் நேர்காணல்

இந்த நேர்காணலை காணொளியாக ஏற்கனவே பார்த்து கேட்டு இருக்கிறேன். திரும்பவும் திரும்பவும் கேட்கத் தூண்டுகிறது. அதில் வாசிப்புப்பற்றி கூறும்போது மிக எளிமையாக ஒரு உதாரணம் பின்வருமாறு சொல்வார்.

"எப்படி நம்மளோட உருவத்தைத் திருத்திக்கிறதுக்கு ஒரு கண்ணாடி அவசியப்படுதோ அதேபோல மனதைத் திருத்திக்கிறதுக்கு ஒரு புத்தகம் தேவைப்படுகிறது."


ஆனால் இலக்கிய உலகில் "நான் வாசித்துக் கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறேன்" என்று கூறும் பலரின் மனம் திருந்தியிருப்பதாகத் தெரியவில்லை.
இன்று எங்களைச் சுற்றி நடக்கும் எல்லாச் சம்பவங்களையும் பார்க்கும்போது...படித்தவர்கள்...எல்லாம் தெரிந்தவர்கள்... நாகரிக மனிதர்களைக் கண்டால்...வெருண்டோட வேண்டியிருக்கிறது.

மாறாக, படிப்பறிவில்லாத ஒரு பாமரனனோடு மிகச் சந்தோசமாக உரையாட முடிகிறது. இன்னமும் அவன் மனிதனாகவே இருக்கிறான். இந்த வேறுபாடு ஏன் என்பதுதான் இன்னமும் புரியவேயில்லை. அப்படியானால் படிக்காமல் உலகம் தெரியாமல் கச்சை கட்டுக்கொண்டு இன்னமும் ஆதிவாசிகளாகவே இருந்திருக்கலாம்போல...........

எஸ். ராமகிருஸ்ணனின் உரையாடலை முழுவதும் காண்பதற்குhttp://www.sramakrishnan.com/?page_id=717

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக